Skip to main content

தெரியாமல் பகிர்ந்த வீடியோ... ட்ரோலுக்கு உள்ளான கிரண் பேடி!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

KIRAN BEDI

 

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநருமான கிரண்பேடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பேசுபொருளாகியுள்ளது.

 

அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கடல் மீது பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரை ராட்சத மீன் ஒன்று துள்ளி எழுந்து வாயால் கவ்வி கடலுக்குள் இழுத்துச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியை நேஷனல் ஜியோகிராபி சேனல் ஒரு மில்லியன் கொடுத்து பதிவு உரிமை பெற்றதாக பொய்யாக உலா வந்த செய்தியை கிரண்பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 'வாட்ச் திஸ்' என்று கேப்ஷன் கொடுத்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கிரண் பேடிக்கு அது 2017 ஆம் ஆண்டு வெளியான '5 ஹெட்டெட் ஷார்க் அட்டாக்' என்ற திரைப்படத்தின் காட்சி என்பது தெரிந்திருக்கவில்லை. அத்திரைப்படத்தில் கடல் மேற்பரப்பில் பறக்கும் ஹெலிகாப்டரை  ராட்சத மீன் ஒன்று கடலுக்குள் இழுத்துச் செல்வதும், அதனை பார்த்து சுற்றுலா பயணிகள் பயப்படுவது போன்ற காட்சி அமைப்பு இடம்பெற்றிருந்தது.

 

KIRAN BEDI

 

இந்த காட்சியை உண்மையான காட்சி என கிரண்பேடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். போலி செய்தியை கிரண்பேடி தெரியாமல் பகிர்ந்தது குறித்து டிவிட்டர் பயனர்கள் கிரண்பேடியை 'ட்ரோல்' செய்து வருகின்றனர். சில நிமிடங்களில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட கிரண்பேடி, 'இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எதற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது' என மழுப்பும் வகையில் பதிவிட்டார்.

 

அவர் டிவிட்டரில் இதுபோன்று போலியான தகவல்களைப் பகிர்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பே 2019ஆம் ஆண்டு வயதான பெண்மணி நடனமாடும் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அது '97 வயதில் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடியின் தாய்' என பதிவிட்டு இருந்தார். ஆனால் அது மோடியின் தாய் அல்ல என்பது பின்னர் தெரியவந்தது. பொய்யான செய்திகள் என வெளிப்படையாக கிரண்பேடியிடம் டிவிட்டர் பயனர்கள் சுட்டிக்காட்டினாலும் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து எந்த ஒரு பதிவுகளையும் அவர் இதுவரை அகற்றவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர். 

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.