Skip to main content

தமிழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது; கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

The victory of the MLA from Tamil Nadu is invalid; Kerala High Court Judgment

 

தமிழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏவான அ.ராஜாவின் வெற்றி கேரள உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

கேரளாவில் தற்போது பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் கட்சி வெற்றி பெற்று அரசமைத்தது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜாவின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதியான தேவிகுளத்தில் அ.ராஜா காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜாவின் வெற்றி செல்லாது எனக் கூறி காங்கிரஸ் கட்சியின் குமார் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், பட்டியல் இனத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதால் தேர்தலில் போட்டியிட்ட ராஜாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட போலியான சாதி சான்றிதழையும் சமர்ப்பித்து அ.ராஜா போட்டியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அறிவித்துள்ளது. அதில், தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.ராஜாவின் வெற்றி செல்லாது என்றும், தனித்தொகுதியில் போட்டியிட அ.ராஜா தகுதியற்றவர் என்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

தமிழ்நாட்டை சேர்ந்த அ.ராஜா தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கேரள சட்டப்பேரவையில் சிபிஎம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது. மேலும் அ.ராஜா உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த அ.ராஜா பதவி ஏற்கும் போது தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றதால் எம்.பி. சு.வெங்கடேசன் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.