Skip to main content

விவாதத்தை கிளப்பிய எலான் மஸ்க்; ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
upport Jagan Mohan Reddy for Elon Musk who says refuse evm machine

அமெரிக்க முதன்மை தேர்தலின் போது நடைபெற்ற வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றது எனச் சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க், “மின்னணு வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது”எனக் கருத்து தெரிவித்திருந்தார். 

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த கருத்துக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதே சமயம், எலான் மஸ்க் கருத்து உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு கூடிய சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. அதன் பின்னர், பெருவாரியான வாக்குகளைப் பெற்ற தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றி சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தில் நான்காவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த ஜெகன் மோகன் ரெட்டி, எலான் மஸ்க் கூறிய கருத்துக்கு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளன. அங்கு வாக்கு இயந்திரங்கள் இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த நாமும் அதை நோக்கி நகர வேண்டும்” எனக் கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“எலான் மஸ்க் கூறுவது உண்மையில் தவறான விஷயம்” - ராஜீவ் சந்திரசேகர் விமர்சனம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Rajeev Chandrasekhar criticized Elon Musk

அமெரிக்க முதன்மை தேர்தலின் போது நடைபெற்ற வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றது எனச் சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இது குறித்து எலான் மஸ்க், “மின்னணு வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது” எனக் கருத்து தெரிவித்திருந்தார். 

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த கருத்துக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எலான் மஸ்க்கை விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்திய இ.வி.எம் ஹேக் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், அது துல்லியமாக மிகக் குறைந்த நுண்ணறிவு சாதனம். இது வாக்குகளை மட்டுமே எண்ணுகிறது. மேலும், எண்ணிக்கையை சேமிக்கிறது. அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களையும் ஹேக் செய்ய முடியும் என்ற மஸ்க்கின் கூற்று தவறானது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஒரு அதிநவீன இயந்திரம் அல்ல, அது ஹேக் செய்யப்படலாம் என்று எலோன் மஸ்க் நினைக்கிறார். ஆனால் அது உண்மையில் தவறு. 

நான் எலான் மஸ்க் அல்ல. ஆனால், உலகில் பாதுகாப்பான எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் தயாரிப்பு எதுவும் இருக்க முடியாது என்று கூறும் தொழில்நுட்பத்தைப் பற்றியும் எனக்கு ஒரு குறிப்பிட்ட புரிதல் உள்ளது. ஒவ்வொரு டெஸ்லா காரையும் ஹேக் செய்ய முடியும் என்று ஒருவர் கூறுவது போலத்தான் இது இருக்கிறது” என்று தெரிவித்தார். 

Next Story

எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி வரவேற்பு!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Rahul Gandhi welcomes Elon Musk's comment

மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்த எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முதன்மை தேர்தலின் போது நடைபெற்ற வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றது எனச் சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க், “மின்னணு வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது”எனக் கருத்து தெரிவித்திருந்தார். 

Rahul Gandhi welcomes Elon Musk's comment

இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இதனை வரவேற்கும் விதமாக அந்தப் பதிவை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு ‘கருப்பு பெட்டி’ ஆகும். அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. தேர்தல் ஆணையம் பொறுப்பபில்லாமல் செயல்படும் போது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.