Skip to main content

திருவாரூரில் பல்கலைக்கழகம்; லட்சத்தீவில் நுழைவுத்தேர்வு - சு.வெங்கடேசன் எம்.பி தலையீடு

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

University in Tiruvarur, Entrance Exam in Lakshadweep

 

மத்திய பல்கலைக்கழத்தில் சேர மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில் எம்.பி வெங்கடேசன் முயற்சியால் 7 மணி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது.

 

பதினெட்டாங்குடி கிராமத்தை சேர்ந்த லோகேஸ்வர் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில் நுழைவுத்தேர்வு எழுத லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதை எம்.பி சு.வெங்கடேசனிடம் மாணவர் முறையிட மாணவருக்கான தேர்வு மையத்தை தமிழகத்திற்கு மாற்றித்தரும் படி மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்திக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து 7 மணி நேரத்தில்  மாணவருக்கு மதுரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன் "தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய பல்கலைக்கழகம்  திருவாரூரில் உள்ளது. அதற்கு தேர்வு எழுத தேர்வு மையம் லட்சத்தீவில் போடுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு மும்பையில் தேர்வு மையம் போடுவது இதையெல்லாம் உடனுக்குடன் தலையிட்டு சரிசெய்கிறோம்.

 

மத்திய அரசு மற்றும் தேர்வு நடத்தும் துறைகள், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதும் போது தங்களுக்கு அருகில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களின் மீது தேர்வு நடத்துகிறவர்கள் மனோரீதியான யுத்தத்தை தொடர்ச்சியாக நடத்துகிறார்கள்.  அதே போல நாடு முழுதும் பொது நுழைவுத்தேர்வு என்ற கொள்கையே முற்றிலும் தவறான விஷயம். அந்தந்த மாகாணத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும்" எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாரதிதாசன் பல்கலை. நுழைவுத் தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு; மாணவர்கள் அவதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ph.D Online Entrance Test conducted by Bharathidasan University Technical disorder

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆவது கல்வி ஆண்டுக்கான முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகையான பாடப்பிரிவுகளில் 1092 மாணவ, மாணவியர் தேர்வுக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை கட்டணமும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் புகல் 12.15 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேர்வாளர்களுக்கு தேர்வெழுத பிரத்யேக லாகின் ஐடி(ID) மற்றும் ரகசிய குறீயீடு உள்ளிட்டவைகளும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தேர்வு எழுத மாணவ,மாணவியர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாக் இன் செய்தனர். ஆனால் பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகினர். 

பின்னர் தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாச ராகவன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியவில்லை. மேலும் இதில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

Next Story

“தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?” - சு.வெங்கடேசன் எம்.பி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Su Venkatesan MP crictized about pm modi to What you are giving to Tamil Nadu is only Thirukkural who pronounced mistakenly

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஐ.ஐ.எம், மின்சார ரயில் சேவை உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று (20-02-24) திறந்து வைத்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்ததை தொடர்ந்து, மவுலானா பகுதியில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 32,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம், கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். 

227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற எம்.பி.சு.வெங்கடேசன், பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர. தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?” என்று குறிப்பிட்டுள்ளார்.