Skip to main content

மத்திய அமைச்சர் முதல் மாநில முதல்வர் வரை… தெலுங்கானாவில் தொடந்து நெருக்கடிகளைச் சந்திக்கும் பாஜக

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

An opposition leader who climbed the stage where the Chief Minister was; Volunteers who threw bombs

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா மாநிலம் சஹீராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கானா சென்றிருந்தார். அப்போது அவர், சஹீராபாத், கம்மாரெட்டி பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் சோதனை நடத்தி, ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி அந்த மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் அரிசிக்கு மத்திய அரசின் மானியம் குறித்து கேள்வி எழுப்பினார். இது அப்போது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமின்றி சஹீராபாத் பகுதியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அவரின் காரை டி.ஆர்.எஸ் கட்சியினர் வழிமறித்தனர். இதுவும் அப்போது தெலுங்கானா மாநில பாஜக அரசியலை பரபரப்பாக்கியது.  

 

இந்தச் சம்பவத்திற்கு பிறகு தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியினர் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை போஸ்டராக ஒட்டினர். மேலும், அந்த போஸ்டர்களில் ‘மோடி ஜி ரூ. 1105’ என்று அச்சடித்து சிலிண்டர்களை விநியோகம் செய்தனர். 

 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக சார்பாக ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கலந்துகொண்டு பேசினார்.

 

ஹைதராபாத் பகுதியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மேடையில் அவர் முன்னிலை வகிக்க பாஜகவினர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மேடை மீது வந்த டி.ஆர்.எஸ் நிர்வாகி ஆனந்த் கிஷோர் கேள்விகளை எழுப்ப முனைந்தார். மைக்கை தன் பக்கம் திருப்பி பேச முற்படுகையில் மேடையில் இருந்த பாஜக நிர்வாகிகள் அவரை பேச விடாமல் மேடையை விட்டு கீழே இழுத்துச்சென்றனர்.

 

பொதுக்கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஹிமந்த பிஸ்வ சர்மா, "பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவது தான் நோக்கம் என சந்திரசேகர் கூறுகிறார்.  ஆனால் நாங்கள் வாரிசு இல்லாத அரசியலை பேசுகின்றோம். அரசு மக்களுக்காக, நாட்டுக்காக  இருக்க வேண்டும். குடும்பத்திற்காக இருக்க கூடாது" என கூறினார்.

 

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து, மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி அறிவுறுத்தியபோது, டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும், தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ், “யார் ஏற்றினார்களோ அவர்கள் தான் குறைக்க வேண்டும்” என்றதுடன் மிகக் கடுமையான சொற்களைக் கொண்டு மத்திய அரசை சாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.