Skip to main content

காவல்துறையைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை...   

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
death sentence

 

திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அன்று 2005 ஆண்டு நிகழந்த காவல் நிலைய மரணத்தில் சம்மந்தப்பட்ட இரன்டு காவல் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

 

துணை சப் இன்ஸ்பெக்டர் ஜீத்து குமார் மற்றும் கான்ஸ்டபிள் எஸ் வி ஸ்ரீ குமார் ஆகிய இரண்டு பேருக்கும் இரண்டு லட்சம் அபராதமும், மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2005 ஆம் ஆண்டில் உதயகுமார் என்ற 27 வயது இளைஞரின் மீது திருட்டு வழக்கு போடப்பட்டு, விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ரூபாய் 45,000 பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அந்த குற்றத்தை ஒத்துக்கொள்ளுவும் அடித்து உள்ளனர். இதுபோன்று செய்ததால் உதயகுமார் விசாரணையின்போதே பலியாகினார்.  

      

சார்ந்த செய்திகள்