Skip to main content

ஆந்திராவில் ரயில் விபத்து- உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Train accident in Andhra Pradesh- casualty rises to 19

 

ஆந்திராவில் சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நின்றது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது.

 

இந்த விபத்தில் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கவும் ஆந்திர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒடிசாவில் பாலசோரில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 296 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்பொழுது ரயில் விபத்து நடந்துள்ள இடத்திற்கு விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளது.மீட்கப்பட்டவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.  

 

இந்த விபத்தில் முதல் கட்டமாக ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

 

உதவி எண்கள்: புவனேஷ்வர் 0674-2301525, 2303069, வால்டெய்ர் -0891-2885914, 89127 46330, 89127 44619, 81060 53051, 81060 53052, 85000 41670, 85000 41671, ஸ்ரீகாகுளம்  0891-2885911, 2885912, 2885913, 2885914.

 

 

 

சார்ந்த செய்திகள்