Skip to main content

"மருந்து வாங்க காவல்துறை உதவும்!" - பினராயி விஜயனின் அதிரடி அறிவிப்பு!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

PINARAYI VIJAYAN

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், மஹாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. கேரளாவிலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

 

கேரள முதல்வர் தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து, மாநிலத்தில் கரோனா நிலவரம் குறித்து மக்களுக்குத் தெரிவித்து வருகிறார். அதேபோல் இன்றும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கேரளாவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு உதவும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

கரோனா பரவல் குறித்துப் பேசிய பினராயி விஜயன், "கேரளா கடுமையான சூழ்நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா உறுதியாகும் சதவீதம் குறையவில்லை. இந்தச் சூழ்நிலையால் மாநிலத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தேவை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், கரோனா பெருந்தொற்று காலமென்பதால், வங்கிகள் அனைத்து ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பினராயி விஜயன், மின் கட்டண நிலுவைத்தொகை மற்றும் நீர் வரி நிலுவைத் தொகை ஆகியவற்றை வசூலிப்பதை இரண்டு மாதங்களுக்கு நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரசமாக மருந்து தேவைப்படுபவர்கள் வெளியே செல்ல முடியாதவர்கள், மருந்துகள் வாங்க கேரள போலீசாரின் உதவியை நடலாம். போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மருந்துகளை வாங்க உதவி கோரலாம் எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.