Skip to main content

பரிவர்த்தனைக்கு கட்டணமா? பே.டி.எம். விளக்கம் 

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Is there a transaction fee? Pay tm. Explanation

 

யூபிஐ பரிவர்த்தனை செய்யும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப் போவதாக காலை முதல் செய்திகள் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. 

 

குறிப்பாக ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின் 2000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஜி.பே, பே.டி.எம். உள்ளிட்டவற்றில் பரிவர்த்தனை செய்யும்போது அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூடுதல் கட்டணம் பயனாளர்களுக்கா அல்லது வங்கிகளுக்கா என்று தெளிவான விளக்கமில்லாமல் பரவியதால் நெட்டிசன்கள் இதனைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்திய அளவில் இந்த விவகாரம் ட்விட்டர் டிரண்டிங்கில் இருந்தது.  

 

இந்நிலையில், பே.டி.எம். விளக்கம் அளித்துள்ளது. அதில், தங்களின் வாடிக்கையாளர்கள் யாரும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Paytm Passtag will be invalid from tomorrow

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது என மத்திய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் எளிமையாக சுங்க கட்டணங்களை செலுத்துவதற்காக பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பே.டி.எம் பாஸ்டேக் மூலமும் சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என தெரிவித்துள்ள நெடுஞ்சாலை ஆணையம், நாளைக்குள் வாடிக்கையாளர்கள் பே.டி.எம் பாஸ்டேக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் இருப்பு தொகையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் ரீசார்ஜ் செய்ய முடியாது எனவும், அபராதமின்றி சுங்கசாவடிகளைக் கடந்து செல்ல பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் வேறு வங்கிக்கு கணக்கை மாற்ற வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.

விதிமீறல் புகாரில் சிக்கிய பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஆர்பிஐ ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் ஆர்பிஐ கட்டுப்பாடுகளை தொடர்ந்து பே.டி.எம் பாஸ்டேக் வைத்துள்ளோருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அறிவுறுத்தலை வேண்டுகோளாக விடுத்துள்ளது.

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.