Terrible train fire in maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம், நான்டெட் நகரில் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில், பூர்ணா - பார்லி வழிச் செல்லும் ரயில் (வண்டி எண் : 07599) நின்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டுஅதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் கொடுத்தனர்.

Advertisment

தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30 நிமிடத்திற்கு மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து, மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.