Skip to main content

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
 Terrible fire accident in hospital- 6 infants lose their live

டெல்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் உள்ள 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஆறு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

காதலித்து ஏமாற்றிய இளைஞர்; முகத்தை சிதைத்த இளம்பெண்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
young woman who threw liquid on the face of boyfriend in delhi

டெல்லியின் புறநகர் பகுதியான நிகல் விகார் பகுதியில் வசிப்பவர் ஓம்கார்(24). கிராபிக் டிசைனராக இருக்கும் ஓம்காருக்கும், அவருடன் பணி செய்த 30 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இருவரும் 3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓம்காருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் காதலி, ஓம்காரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு வயதை காரணம் காட்டி காதலியை ஓம்கார் நிராகரித்துள்ளார். 

இதனால், மனம் உடைந்த அந்த பெண் தன்னை ஏமாற்றிய ஓம்காரை பலிவாங்க முடிவு செய்து, ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்து கூலிப்படையை அமர்த்தியுள்ளார். ஓம்கார் முகத்தில் திரவத்தை(ஆசிட்) ஊற்றி சிதக்க வேண்டும் என்று அவர்களிடம் காதலி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த ஓம்காரை கூலிப்படையினர் வழிமறித்து முகத்தில் திரவத்தை ஊற்ற முயன்றுள்ளனர். ஆனால் அது முடியாமல் போனதால், கையில் வைத்திருந்த கைத்தியை எடுத்து ஓம்காரின் முகத்தில் சரமாரியாக கிழித்து சிதைத்துள்ளனர்.

இதையடுத்து படுகாயமடைந்த ஓம்காரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வத்தனர். பின்னர் ஓம்கார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்பு கூலிப்படையை சேர்ந்த விகாஷ்,பாலி, ஹர்ஷ்,ரோகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஓம்காரின் காதலிதான் இந்த சம்பவத்தை அரங்கேற்றினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஓம்காரின் காதலியை கைது விசாரணை நடத்தியபோது, “நிச்சயதார்த்தத்தை நிறுத்துமாறு ஓம்காரிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து நான் எதிர்ப்பு தெரிவித்தால், தன்னுடன் எடுத்துகொண்ட அந்தரங்க படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதனால்தான் அவரை பழிவாங்க கூலிப்படையை அமைத்தேன்” எனத் தெரிவித்தார்.

Next Story

மகன் செய்த கொலைக்குத் துணை நின்ற குடும்பத்தினர்; விசாரணையில் பகீர் தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
The family that supported the son's did illegal in delhi

தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் நீரஜ் சோலங்கி. இவருக்கும், பூஜா என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. பூஜாவின் மாமியார், அவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் பூஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அதில் அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததில் பூஜாவின் கணவரான நீரஜ்ஜுக்கு பெருன் அதிருப்தியை தந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி பூஜா தனது குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனை விட்டு வெளியே வந்த பூஜா, ரோஹ்டக்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்ல விரும்பியுள்ளார். ஆனால் அவரது கணவர் நீரஜ் சோலங்கி, குழந்தைகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு மற்றொரு காரில் பூஜாவை பின்தொடரும்படி கூறியுள்ளார். நீரஜ் தனது குடும்பத்தினருடன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு முன்சென்றுள்ளார். இதை நம்பி பூஜாவும் தனது சகோதரருடன் நீரஜ்ஜை பின் தொடர்ந்து வந்துள்ளார். 

இதனிடையே, நீரஜ் தனது காரை வேறு பாதைக்கு மாற்றி அந்த இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட குழந்தைகளை நீரஜின் குடும்பத்தினர் புதைத்துள்ளனர். இதற்கிடையே, கார் வேறு பாதைக்கு சென்றவுடன் பூஜாவின் சகோதரர் நீரஜை செல்போன் மூலம் அழைத்துள்ளார். ஆனால், அழைப்பு இணைக்கப்படவில்லை. இதில் சந்தேகமடைந்த பூஜாவின் சகோதரர் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, இரட்டை பெண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, பூஜா கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்தனர். மேலும், அந்த உடல்களை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு குடும்பத்தினரே உறுதுணையாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.