Skip to main content

கோவிலின் கிணறு இடிந்து 11 பேர் பலி; பிரதமர் வேதனை

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Temple's well collapses and 11 people passed away; Prime Minister agony

 

மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர், படேல் நகரில் உள்ள கோவில் ஒன்றில் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர், படேல் நகரில் உள்ள பலேஸ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு இடிந்து விழுந்தது. ராமநவமி விழா கொண்டாடப்பட்ட போது கோவிலில் இருந்த கிணற்றை மூடி இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 30 பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். கோவிலில் இருந்த பிற பக்தர்களும் தகவல் அறிந்து உடனடியாக வந்த மீட்புக்குழுவினரும் துரிதமாகச் செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட பக்தர்களை மீட்டனர். எனினும் 11 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

 

அளவுக்கு அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த சம்பவத்தை அறிந்து மீட்பு பணியை விரைவுபடுத்த உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

“CMO இந்தூர் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இந்தூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். பக்தர்களை வெளியேற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலர் மீட்கப்பட்டுள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல்வர், “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மீட்பு பணி நடந்து வருகிறது. 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒன்பது பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் மீட்கப்படுவார்கள். மற்றவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.

 

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். முதலமைச்சரிடம் இது குறித்து விசாரித்தேன். நிலைமை குறித்த விவரங்களையும் தற்போதைய நிலையையும் விளக்கினார். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.