Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; காதலியைக் கொடூரமாகக் கொன்ற கோவில் பூசாரி

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Temple priest drama after incident passed away girlfriend in Hyderabad

 

காதலியைக் கொலை செய்துவிட்டு கோவில் பூசாரியே காவல்துறையில் புகார் கொடுத்து நாடகமாடிய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான சம்சாராவில் வசித்து வந்தவர் அப்சரா(30). கடந்த 3 ஆம் தேதி பத்ராச்சலம் சென்று தோழிகளைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அப்சரா அதன்பின் வீடு திரும்பவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அப்சரா குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். அப்போது  அருகே உள்ள கோவில் பூசாரியும் அப்சராவின் நெருங்கிய நண்பரான வெங்கட சாய் என்பவரை அப்சராவின் தந்தை உடன் அழைத்துச் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்சரா குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர் சென்ற வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறை இறுதியாக அப்சரா சரூர் நகரில் நின்று கொண்டிருந்த காரில் ஏறியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து அந்த காரில் சென்ற வழித்தடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை எல்லாம் ஆய்வு செய்தபோது அந்த காரை பூசாரி வெங்கட சாய் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் வெங்கட சாயை பிடித்து விசாரித்ததில், அப்சராவை தான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், “அடிக்கடி கோவிலுக்கு வரும் அப்சராவுக்கும் பூசாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இப்படி இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அப்சரா தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வெங்கட சாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் பல்வேறு காரணங்களைக் கூறி திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் நாளுக்கு நாள் அவரின் நெருக்கடி அதிகமாகவே, அப்சராவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரைத் தனியாக அழைத்துள்ளார். அதனால் வீட்டில் தோழிகளைப் பார்ப்பதற்காக சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அப்சராவும் வெங்கட சாய் உடன் சென்றுள்ளார். காரில் அப்சராவை சரூர் பகுதியிலிருந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் தனக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். கோவில் பணிக்காகவே இங்கே இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்சரா அவருடன் தகராறு செய்திருக்கிறார். இந்த நிலையில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற வெங்கட சாய், அப்சராவை தாக்கி தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து உடலை மீண்டும் சரூர் நகர் எடுத்து வந்து அருகே உள்ள கழிவு நீர்த் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கழிவு நீர்த் தொட்டியிலிருந்து உடலை மீட்ட போலீசார் பூசாரி வெங்கட சாயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்