Skip to main content

மத்திய அரசைக் கண்டித்து தெலங்கானா முதலமைச்சர் தர்ணா!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Telangana Chief Minister Tarna condemns Central Government

 

மத்திய அரசின் நெல் கொள்முதல் தொடர்பான கொள்கையை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்ட தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், தங்களது மாநிலத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுமா என்பதை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கெடு விதித்துள்ளார். 

 

நெல் கொள்முதல் தொடர்பான மத்திய அரசு உரிய பதிலைக் கொடுக்காவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் சந்திரசேகரராவ் எச்சரிக்கை செய்துள்ளார்.

 

டெல்லியில் உள்ள தெலங்கானா பவனில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், விவசாயிகளின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் என்றும், அரசையே கவிழ்க்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார். 

 

விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கேட்பதற்கு விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது என்று கூறிய அவர், 24 மணி நேரத்திற்குள் நெல் கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என்ற தெலங்கானா மாநிலத்தின் கோரிக்கைக்கு பிரதமரும், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் செவி சாய்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.