/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/995_240.jpg)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராகஇருந்த அசாம்கான் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தினைத்தெரிவித்திருந்தார். இவரின்இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு பேச்சுரிமையில்கட்டுப்பாடு வேண்டும் எனப் பலரும் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் வரை சென்றஇந்தவிவகாரம்5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுவிசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அப்துல் நசீர் தலைமையிலானஅமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், பேச்சு மற்றும் கருத்துரிமையைக்கட்டுப்படுத்தகூடுதல் விதிகளைஅமல்படுத்த தேவையில்லை. அரசியலமைப்பு பிரிவு 19 உட்பிரிவு 1 மற்றும் 2-ன் கீழ் தற்போது எந்தெந்தவிதிகள் இருக்கிறதோ, அந்த விதிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கும்பொருந்தும். மக்கள் பிரதிநிதி வெளியிடும் அறிக்கைக்கு அவரேமுழு பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட அமர்வில்4 பேர் ஒரு தீர்ப்பும், ஒருவர் மாறுபட்டதீர்ப்பும்வழங்கியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)