Skip to main content

”கீழ்தட்டு மக்களுக்காக உழைத்தவர்”-சுமித்ரா மஹாஜன் இரங்கல்

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
sumitra

 

அவர் ஒரு சிறந்த தலைவர், கீழ்தட்டு மக்களுக்காக உழைத்தவர். இந்தியாவுக்கே கலைஞரின் மறைவு ஒரு பெரும் இழப்பு என்று மக்களவை சபாநாயாகர் சுமித்ரா மஹாஜன், திமுக தலைவர் கலைஞர் மறைவு குறித்து தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

"மறைவு அறிந்து வேதனை"-ராம்நாத் கோவிந்த்

Published on 07/08/2018 | Edited on 09/08/2018

திமுக தலைவர் கலைஞர் காலமானது குறித்து குடியரசுத்தலைவர் இரங்கல்

”திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும்,  மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்...

 

 

Next Story

சிகிச்சைக்கு சிறப்பாக ஒத்துழைப்பு அளிக்கும் கலைஞர்!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
ks

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது.  மருத்துவ சிகிச்சைகளுக்கு கலைஞர் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.  கலைஞரின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்று காவேரி மருத்துவமனை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

 

மேலும்,  வயது காரணமாக கலைஞர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளது.  கலைஞரின் கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் ஆகியவை சீராக்கப்பட வேண்டியுள்ளது.  

 

kau

 

ஜூலை 28ம் தேதி ரத்த அழுத்தம் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவக்குழு சீராக்கியது. ஜூலை 29ம் தேதி கலைஞருக்கு மூச்சு விடுவதில் ஏற்பட்ட பிரச்சனையை மருத்துவக்குழு சரி செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.