Skip to main content

சோனியா, ராகுல் தெலுங்கானாவில் தீவிர பிரச்சாரம்...

Published on 24/11/2018 | Edited on 24/11/2018
sonia


காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்தனர். அதில் சோனியா காந்தி பேசியதாவது:
 

”பிறந்த குழந்தையின் முக்கியத்துவம் ஒவ்வொரு தாயுக்கும் தெரியும். ஆனால், தெலுங்கானா தனிமாநிலமாக பிறந்தபோது தவறுதலாக மக்களை பற்றி அக்கறை கொள்ளுபவர்கள் கையில் சேராமல், தன்னை பற்றி மட்டும் நினைப்பவர்களிடம் சேர்ந்துவிட்டது” என்று சோனியா காந்தி பேசினார்.
 

ராகுல் காந்தி பேசுகையில், ”தெலுங்கான தனி மாநிலமாக உருவாக வேண்டும் என்று நினைத்தபோது அதற்காக மக்கள் பக்கம் நின்றவர் சோனியா காந்திதான். தெலுங்கான மாநிலம், மக்களின் வேற்வையாலும், இரத்ததாலும் உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கத்திற்கு சோனியா ஜியும் கை கொடுத்தார்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்