Skip to main content

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் மரணம்!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

asish yechury

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்த அதிகரித்துக் கொண்டே வருகிறது. மன்மோகன் சிங், ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 

இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 34. மகன் உயிரிழந்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், "கடினமான நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை அளித்த அனைவருக்கும், என் மகனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கும், எங்களோடு துணை நின்ற எண்ணற்ற மற்றவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார். 

 

ஆசிஷ் யெச்சூரியின் மரணத்திற்கு பிரதமர் மோடி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆசிஷ் யெச்சூரி பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
Complaint against Prime Minister Modi in Election Commission

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் குடும்பமும், அதிகாரமும்தான் முக்கியம்’ என்று குற்றம் சாட்டினர். தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சிகளின் ஆட்சி அமைந்தால் ராமர் மீண்டும் குடிசைக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசரை கொண்டு இடித்து விடுவார்கள். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும் எங்கு பயன்படுத்த கூடாது என்று காங்கிரஸும், சமாஜ்வாதியும் யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.  பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

Complaint against Prime Minister Modi in Election Commission

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில், “மத ரீதியில் பாஜக தலைவர்கள் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இது போன்ற வெறுப்புப் பிரச்சார யுக்திகளை முளையிலேயே கிள்ளியெறிய வலியுறுத்திய போதும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரதமர் மோடி மீது கொடுத்த புகாருக்கு அவரிடம் விளக்கம் கேட்காமல் பாஜக தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் பிரதமர் மோடியும், அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸால் எந்த பயனும் ஏற்படவில்லை. பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை தூண்டி வருகின்றனர். எனவே வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், “பாஜக தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறி வருவதை தேர்தல் ஆணையத்திடம் புகாராக அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘இஸ்லாமியர்’ என்று சொல்ல தூர்தர்ஷன் தடை; சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம்!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Doordarshan Ban on Saying 'Islamic'; Sitaram Yechury strongly condemned

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகை சூழலில் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் பிரச்சார உரையின் போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘இஸ்லாமியர்’ என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தேர்தல் பிரச்சார உரையின் போது இஸ்லாமியர் என்பதற்கு பதில் மாற்று மதத்தினர் என பயன்படுத்த வற்புறுத்தப்பட்டது. வகுப்புவாத கட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி என்ற சொற்களை பயன்படுத்தவும் தூர்தர்ஷன் தடை விதித்துள்ளது. கொடூர சட்டங்கள் என்ற சொல்லை பயன்படுத்தவும் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி தடை விதித்துள்ளது. மேலும் தூர்தர்ஷன் தடை விதித்த சொற்களை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தும் ஏற்கவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.