Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; தம்பியை 20 துண்டுகளாக வெட்டிக் கொடூரமாகக் கொன்ற அக்கா

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 sister brutally incident her younger brother by cutting her into 20 pieces

 

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் சிந்திகி அருகே உள்ள தேவனாங்காவ் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தப்பா. இந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது. சித்தப்பாவின் மகள் பாக்கியஸ்ரீ (31). இவரும் அதே பகுதியில் உள்ள சாசாபாலு கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பா தளவார் (32) என்பவரும் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2015ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனாலும் இருதரப்பும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர்கள் அவர்களைப் பிரித்து விட்டனர்.    

 

இதையடுத்து சங்கரப்பாவுக்கு திருமணமாகியது. கருத்து வேறுபாட்டால் ஆறு மாதங்களிலேயே அவர் மனைவியைப் பிரிந்து சொந்த கிராமத்தை விட்டு கர்நாடகா மாநில எல்லையில் உள்ள ஜிகினி தொழிற்பேட்டையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தனியாக அறை எடுத்து தங்கியபடி வேலை செய்து வந்த சங்கரப்பா, தனது முன்னாள் காதலி பாக்கியஸ்ரீயுடன் அவ்வப்போது கைப்பேசியில் பேசி வந்தார். மீண்டும் அவர்களுக்குள் காதல் நெருக்கம் அதிகரித்தது. இதையடுத்து, சங்கரப்பா, ஒருநாள் காதலியை ஜிகினிக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற பாக்கியஸ்ரீ அதன்பின் வீடு திரும்பவில்லை. காதலர்கள் இருவரும் கணவன், மனைவி போல் ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.    

 

இந்நிலையில், பாக்கியஸ்ரீயின் தம்பி லிங்கராஜ் (22) கடந்த 2015ம் ஆண்டு அக்காவைத் தேடி ஜிகினி பகுதிக்குச் சென்றார். அங்கு தனது அக்கா சங்கரப்பாவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருவதை அறிந்து ஆத்திரம் அடைந்தார். சங்கரப்பா ஏற்கனவே திருமணமானவர். அவருடன் வாழ வேண்டாம் என்றும், தன்னுடன் சொந்த ஊருக்கு வந்துவிடுமாறும் அக்காவை லிங்கராஜ் அழைத்துள்ளார். அதற்கு பாக்கியஸ்ரீ மறுத்துவிட்டார். ஆனால், லிங்கராஜ்  தொடர்ந்து அவர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார். 

 

தனது காதல் வாழ்க்கைக்கு தம்பி இடையூறாக இருப்பதாக எண்ணிய பாக்கியஸ்ரீ, காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து அவரை அடித்துக் கொலை செய்தார். பின்னர் சடலத்தை 20 துண்டுகளாக வெட்டி 3 பைகளில் அடைத்து ஜிகினி மற்றும் அருகில் உள்ள மஞ்சனஅள்ளி ஏரிகளில் வீசிவிட்டனர். இதையடுத்து பாக்கியஸ்ரீயும் சங்கரப்பாவும் ஜிகினியில் இருந்து தப்பித்து மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். மற்றொருபுறம் லிங்கராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஜிகினி காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில்தான், கொலையாளிகள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருப்பது ஜிகினி காவல்துறைக்கு தெரியவந்தது. ரகசியத் தகவலின் பேரில் மார்ச் 19ம் தேதி காவல்துறை தனிப்படையினர் மகாராஷ்டிரா மாநிலம் விரைந்தனர். அங்கு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்த பாக்கியஸ்ரீ, சங்கரப்பா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவுக்கு தொல்லையாக இருந்த தம்பியை அக்காவே காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த  வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.