Skip to main content

வங்காள தேச எம்.பி கொலை வழக்கு; விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Shocking information revealed in the investigation on  Bangladesh MP case

வங்காள தேச நாட்டில் ஷேக் ஆளும் அவாமி லீக் ஆட்சி ந கட்சியின் எம்.பியாக பொறுப்பு வகித்து வந்தவர் அன்வருல் அசிம். இவர், கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைகாகக் கொல்கத்தாவுக்கு வந்து, பாராநகர் பகுதியில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். இதனையடுத்து, அடுத்த நாள் வெளியே சென்ற அன்வருல் அசிமி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அசிமின் நண்பர், அவரின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு அழைத்த போது எந்தவித பதிலும் வரவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து வங்காளதேச தூதரகம் போலீசில் புகார் அளித்திருந்தது. அதன்படி, வங்காள தேச எம்.பி அன்வருல் அசிம்மை கண்டுபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி வந்தனர். இந்த நிலையில், கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசிம் சடலமாக மீட்கப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கூறுகையில், ‘இதுவரை, சம்பந்தப்பட்ட கொலையாளிகள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது திட்டமிட்ட கொலை. இதுவரை வங்கதேசத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இந்தியர் எவருக்கும் தொடர்பு இல்லாததால், இந்தியாவுடனான உறவில் மோசமடையும் வகையில் எதுவும் இங்கு நடக்கவில்லை’ என்றார். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க போலீசாருடன், வங்காளதேஷ் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது குறித்து சி.ஐ.டி போலீஸ் ஐ.ஜி. அகிலேஷ் சதுர்வேதி கூறுகையில், ‘இது திட்டமிடப்பட்ட கொலை. பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடிமகன் அக்தருஸ்ஸாமான், அன்வருல் அசிமை கொலை செய்வதற்காக அவர் ரூ.5 கோடி கொடுத்திருக்கிறார். கொலையாளிகள், அசிம்மின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை துண்டுத்துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் கட்டி வைத்து பல இடங்களில் வீசி எறிந்திருக்கலாம். 

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அசிமுடன் ஒரு பெண் உட்பட அடையாளம் தெரியாத 2 ஆண்கள் என மூன்று பேர் வருவதைக் காட்டுகிறது. அடுத்த சில நாட்களில் அவருடன் வந்தவர்கள் வெவ்வேறு தேதிகளில் வளாகத்தை விட்டு வெளியேறுவதைக் கண்டாலும் அசிம் வெளியே வரவே இல்லை. அசிம், சி.சி.டி.வி காட்சியில் தோன்றிய அந்தப் பெண்ணால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர் குடியிருப்புக்கு சென்ற உடனேயே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்தக் கொலையைச் செய்த ஒருவரான ஹவ்ல்தாரையும், கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை; பெற்றோர் குற்றச்சாட்டு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Student incident in private college hostel; Accusation of parents

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக்கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.

மேலும் இறந்த தாரணியை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் மதியம் 12 மணி அளவில்  தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடுநேரத்திற்கு பின் ஆறு மணி அளவில்  தாரணி இறந்துவிட்டார் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெரித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவியின் தாய், 'தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொன்று விட்டனர். எனது மகளை பறிகொடுத்து விட்டேனே' எனக் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

Next Story

திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம்பெண்; முன்னாள் காதலனின் வெறிச்செயல்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Incident happened on A young woman preparing for marriage in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், டாடியா பகுதியைச் சேர்ந்தவர் காஜல் அஹிர்வார்(22). இவருக்கும், இளைஞர் ஒருவருக்கு நேற்று (23-06-24) திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணப்பெண்ணான காஜல் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு மேக்கப் போடுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள அழகு நிலையத்திற்கு தனது சகோதரியுடன் வந்தார். மேலும், அந்த அழகு நிலையத்திற்கு உள்ளே சென்று காஜல் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது, அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகத்தில் முகமூடி அணிந்து வெளியே நின்று கொண்டு, காஜலிடம் வெளியே வருமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர், ‘வெளியே வா காஜல், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய்’ என்று கூறியதாக கூறப்படுகிறது. 

ஆனாலும், அந்த பெண் வெளியே வர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு காஜலை சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த காஜல் மயங்கி கீழே விழுந்தார். இதனிடையே, காஜலை துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த காஜலின் சகோதரி, காஜலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காஜல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இளம்பெண்ணை சுட்டுக்கொலை செய்தவர் தீபக்.  அந்தப் பெண் வசிக்கும் அதே ஊரில்தான் அவரும் வசித்து வந்துள்ளார். தீபக்கும், காஜலும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காஜலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தீபக், காஜலை சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற தீபக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.