Skip to main content

பிரதமரின் 'ஆயுஷ்மான் பாரத் யோஜனா' திட்டத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்... கையும் களவுமாக பிடிபட்ட மருத்துவமனைகள்...

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

தமிழகத்தில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு கடந்த ஆண்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

scam in ayushman bharat scheme

 

 

இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்கள் தங்களது மருத்துவ செலவுகளை இந்த காப்பீட்டு திட்டம் மூலம் செலுத்த முடியும். மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தற்போத தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இது தொடர்பான ஊழல் அதிக அளவில் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும், டயாலிசிஸ் செய்யும் வசதியும், கிட்னி சிறப்பு மருத்துவரும் இல்லாத மருத்துவமனையில் டயாலிஸிஸ் செய்தாகவும் கூறி பல்வேறு காரணங்களை காட்டி மருத்துவமனைகள் ஊழலில் ஈடுபட்டுள்ளன. மேலும் சாதாரண சளி பிரச்சனைக்கு வந்தவர்களுக்கு கூட கொடிய நோய் இருப்பதாக அரசிடம் கணக்கு காட்டி அதற்கான சிகிச்சை செலவு என கூறி கோடிக்கணக்கில் பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தேசிய நல ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை தேவைதானா என்பதை உறுதி செய்ய திடீரென தங்கள் குழுவுடன் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்த அந்த நோயாளி ஸ்கூட்டியில் சுற்றிக்கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் நடந்த ஒருசில ஆய்வுகளிலும் முன்னுக்கு பின் முரணான சம்பவங்கள் நடந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தொடங்கிய போதே பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்