Skip to main content

பிரித்வி ஷாவை விரட்டி விரட்டி தாக்கிய இளம்பெண் (வீடியோ)

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

sapna gill attacked the cricketer prithvi shaw

 

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் விரட்டி விரட்டித்  தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருப்பவர் பிரித்வி ஷா. 23 வயதான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா, ஏப்ரலில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். 

 

இந்நிலையில், பிரித்வி ஷா கடந்த புதன்கிழமையன்று மும்பை ஏர்போர்ட்டுக்கு அருகே உள்ள ஹோட்டலுக்கு தனது நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது, பிரித்வி ஷாவிற்கு அருகில் வந்த ஒரு ஜோடி தாங்கள் உங்களுடைய ரசிகர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த பிரித்வி ஷா, “ச்ச.. ச்ச.. என்னோட ரசிகருன்னு வேற சொல்றிங்க.. ஒரு போட்டோ தான.. எடுத்துக்கோங்க..” என்பது போல் கூறியுள்ளார்.

 

இதை கப்பென்று பிடித்துக் கொண்ட அந்த ஜோடி, சில போட்டோக்களை எடுத்துக் கொண்டனர். ஆனால், பிரித்வி ஷாவை விடாத அந்த ஜோடி, தொடர்ந்து செல்ஃபி எடுக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் எரிச்சல் அடைந்த பிரித்வி ஷா, தன்னுடைய மேனேஜரை அழைத்து அவர்களை கட்டுப்படுத்துமாறு கூறியுள்ளார். மேலும், இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹோட்டல் நிர்வாகம், அந்த ஜோடியை ஹோட்டலை விட்டு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது.

 

அதன் பிறகு, ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த அந்த ஜோடி, தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு,  பிரித்வி ஷா அங்கிருந்து புறப்பட்ட பின் அவரது காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, மும்பையில் சாலையில் வைத்து பிரித்வி ஷாவின் காரை மடக்கிய அந்த கும்பல், பேஸ்பால் மட்டைகளால் அவரையும், அவரது காரையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

 

இதனிடையே, காவல்நிலையத்தில் பிரித்வி ஷா தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சப்னா கில் என்கிற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம், குற்றம் சாட்டப்பட்ட பெண் தரப்பில், பிரித்வி ஷா தான் தன்னை முதலில் தாக்கினார் என அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர். 

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.