Skip to main content

ரவுடிகள் கத்தி அரிவாள்களுடன் மோதல்! நாட்டு வெடிகுண்டு வெடித்து காயம்! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
Rowdies clash with screaming scythes! Country bomb blast injures

 

கடலூர் அருகே ரவுடிகள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 3 பேர் பலத்தக் காயமடைந்தனர். புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரபல ரவுடி தாடி அய்யனார் என்கிற ராஜதுரை (28) மற்றும் தமிழ்நாட்டுப் பகுதியான கடலூர் அருகே உள்ள கீழ் குமாரமங்கலத்தை அடுத்த செல்லஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவா (24). இவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஒருவரிடம் ஒன்றாக செயல்பட்டுவந்த நிலையில், தேவா உறவினரை அய்யனார் தரப்பு தாக்கியதால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதனால் இரு கோஷ்டிகளாக செயல்பட்டனர். இந்த நிலையில், சமீபத்தில் புதுச்சேரி சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி அய்யனார் கோஷ்டி நேற்று (30.06.2021) வழக்கமாக மது அருந்தும் கடலூர் மாவட்ட எல்லையான மலட்டாறு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து.

 

அய்யனாரை தாக்க தேவா கோஷ்டி நாட்டு வெடிகுண்டு மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அய்யனார் மற்றும் அவரது கூட்டாளி வேல்முருகனை தேவா கோஷ்டி கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியுள்ளனர். பதிலுக்கு அய்யனார் கோஷ்டியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நாட்டு வெடிகுண்டை எடுத்து தேவா வீச முற்பட்டபோது வெடிகுண்டு வெடித்ததில் தேவாவின் கை விரல் துண்டானது. படுகாயமடைந்த நிலையில் அவரது உறவினர் ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால்  பாரிசங்கர் மற்றும் போலீசார் தமிழக பகுதியான கீழ்குமாரமங்கலம் பகுதிக்குச் சென்றனர்.

 

Rowdies clash with screaming scythes! Country bomb blast injures

 

அங்கு நாட்டு வெடிகுண்டுகள் சிதறிக்கிடந்தன. தமிழ்நாடு - புதுச்சேரி இரு மாநில எல்லைப் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு அம்மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில் ரவுடிகளுக்குள்ளான மோதல் என்பது தெரியவந்தது. இந்தநிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் கைவிரல் துண்டான தேவா மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மோதலில் காயமடைந்த அய்யனார், வேல்முருகன் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து  தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறது.  

 

இந்த மோதலில் தொடர்புடைய பிரபல ரவுடி தாடி அய்யனார் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்துவரும் நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி சிறையில் இருந்து வெளியில் வந்த இவர், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக தாடி அய்யனார் மற்றும் அவரது கோஷ்டிகள் தமிழ்நாட்டு எல்லைப் பகுதியான ரெட்டிச்சாவடி, கீழ்குமாரமங்கலம் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். இரு மாநில எல்லை கிராமங்களில் நடைபெற்ற இந்த வெடிகுண்டு வீச்சு மற்றும் கோஷ்டி மோதலையடுத்து எல்லைப்புற கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.