Skip to main content

தமிழ்நாட்டை பின்பற்ற மம்தாவுக்கு கோரிக்கை! நீட்டுக்கு எதிராக வலுக்கும் போராட்ட குரல்! 

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Request to Mamta to follow Tamil Nadu! Voice of struggle against NEET

 

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் வலுத்துவருகிறது. அந்த மாநிலத்தின் தேசிய அமைப்பான ‘பங்ளா பொக்கே’ என்ற அமைப்பு, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிவருகிறது. கடந்த 18ஆம் தேதி கொல்கத்தாவில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய பலரும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை போல நமது முதல்வர் மம்தா பானர்ஜியும் செயலாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பங்களா பொக்கே அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் கார்கா சாட்டர்ஜி, “நீட் தேர்வு என்பது சொந்த மாநிலத்தில் டாக்டராக வேண்டும் என்ற வங்காள மக்களின் கனவுகளை சிதைத்துவிடும். சிதைத்துக்கொண்டும் இருக்கிறது. இந்தி பேசுகின்ற மாநிலங்களில் இயங்கும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு பயிற்சி மையங்கள், சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனங்கள் ஆகிய மூன்றும் கூட்டு சேர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவுகளைத் திருடுகின்றன.

 

இனி அடுத்தடுத்து வரும் நாட்களில், தேசிய தேர்வு முகமை மூலம் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு தேர்வுகளைப் புகுத்தி அனைத்தையும் இந்திமயமாக்கும் திட்டத்தை டெல்லி எடுத்துவருகிறது.

 

இந்தி மொழிக்கும், இந்தி பேசும் மாநிலங்களுக்கும் நாம் அடிமைகள் கிடையாது. வங்காள மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை வேர்கள் அற்ற ஒட்டுண்ணிகளால் திருட முடியாது; திருடவும் அனுமதிக்கக் கூடாது! வங்காள மாணவர்களின் எதிர்காலத்திற்கான போராட்டம் இது. 2024இல் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் என்பது வெறுமனே பாஜகவுக்கு எதிரான தேர்தல் மட்டுமல்ல; அது பெரும் போர். அந்தப் போர் என்பது, டெல்லியில் குவிந்து கிடக்கும் மாநிலங்களுக்கான அதிகாரங்களை மீட்டெடுக்கும் போராட்டமாகவும் அந்தத் தேர்தல் போர் இருக்க வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.

 

கூட்டத்தில் பேசிய செயற்பாட்டாளர்கள் அனைவரும், “நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு முன்மாதிரியாக தமிழ்நாடு செயல்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை துவக்கியிருக்கிறார். அவருக்கு இந்தி பேசாத அனைத்து மாநிலங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களின் தளபதி அவர்தான். நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சனையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும். நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் முடிவை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டைப் போல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சட்டமியற்றி குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் தர வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினர்.

 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டைப் பின்பற்றி மேற்கு வங்கத்தில் போராட்டமும் கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.