Skip to main content

ஆன்லைன் மூலம் கடன் வழங்கி வந்த செயலிகள் நீக்கம்! 

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

Removal of apps that provide loans online!

 

புதுச்சேரியில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் 55 செயலிகளை கூகுள் நிறுவனத்திருடன் பேசி பிளே ஸ்டோரில் இருந்து சைபர் கிரைம் காவல்துறையினர் நீக்கி உள்ளனர். 

 

புதுச்சேரியில் குறைந்த வருமானம் இருப்பவர்களை குறித்து வைத்து 2,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கடன் வழங்கும் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் செயல்பட்டு வந்தன. எளிமையான முறையில் கடனை வழங்கிவிட்டு, பின்னர் அதிக வட்டி, அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், கடன் பெற்றவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்தனர். 

 

இது தொடர்பாக, புதுச்சேரி காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததால், இது குறித்து சைபர் கிரைம் காவலர்கள், விசாரித்தனர். விசாரணையில் இந்த கடன் செயலிகள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து, மத்திய அரசின் உதவியுடன் கூகுள் நிறுவனத்தினருடன் பேசி 55 கடன் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Applications are welcome for Computer Tamil Award

 

2023 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் மற்றும் செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் கடந்த 2020, 2021, மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்திலோ, http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 31.12.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

 

கூடுதல் விவரங்களுக்கு 044 28190412, 044 28190413 என்ற தொலைப்பேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (31.12.2023) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி இன்று அறிமுகம்

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

The app Stalin with People was launched today

 

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள். அதே செப்டம்பர் 17 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக சார்பில் கொண்டாடுவது வழக்கம். அதே சமயம் கலைஞரின் நூற்றாண்டு விழாவும் தொடங்கி நடைபெறுவதால் இந்தாண்டு முப்பெரும் விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


அந்த வகையில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப்டம்பர் 17) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. மேலும் அந்த அறிவிப்பில் “ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது மயிலாடுதுறை கி. சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க. சுந்தரத்திற்கும், கலைஞர் விருது அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும் பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும் பேராசிரியர் விருது பெங்களூர் ந. இராமசாமிக்கும் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதையடுத்து வேலூரில் நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6 மணிக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து வேலூருக்கு சென்றுள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த செயலியில் மக்களுக்கும், நாட்டுக்கும் திமுக செய்த நலத்திட்டங்கள் குறித்தும், அரசின் செயல்பாடுகள், தொகுதி பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முப்பெரும் விழாவை முடித்து விட்டு இன்று இரவு 8.35 மணிக்கு காட்பாடியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு திரும்ப உள்ளார்.