Skip to main content

2000 ரூபாய் நோட்டுஅச்சடிப்பதை நிறுத்திட்டோம் - ஆர்பிஐ அதிரடி!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019


கடந்த சில மாதங்களாக ஏடிஎம் மையத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் வருவதில்லை என்ற குழப்பம் நிலவிவந்த நிலையில் தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தனியார் நாளிதழ் ஒன்று 2 ஆயிரம் ரூபாய் தாள்களின் புழக்கம் குறைந்திருப்பதற்கான காரணம் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல் கேட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி,  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் அதற்கான விளக்கத்தையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் காரணமாக சுமார் 354 கோடி எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை படிப்படியாக குறைந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 2017-18-ஆம் நிதியாண்டில் சுமார் 11 கோடி ‌எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் 4 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், நடப்பு நிதி ஆண்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய்‌நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை.

 


 

சார்ந்த செய்திகள்