Skip to main content

ஒன்பது கோடிக்கு 119 ஆபாச வீடியோக்கள்... போலீசை அதிரவைத்த பிரபல நடிகையுடைய கணவரின் விவகாரம்!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Rajkundra gets bail in private video case

 

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரைக் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவை ஆபாசப் படங்கள் தயாரித்த வழக்கில் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். ராஜ் குந்த்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 34 (பொது நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அநாகரீகமான விளம்பரங்கள் மற்றும் காட்சிகள் வெளியிட்டது), மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களின் அநாகரிக பிரதிநிதித்துவம் (தடை) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஆபாசப் பட வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோக்களை ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்கத் திட்டமிடப்பட்டதும் தெரியவந்தது. தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபாசப் படங்களைத் தயாரித்து செயலிகளில் பதிவேற்றம் செய்த புகாரில் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராஜ் குந்த்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அவரது அலுவலகங்களில் இருந்தும் பல ஆபாச சீடிக்கள் கைப்பற்றப்பட்டன.

 

ராஜ் குந்த்ராவுக்கு எதிரான 1400 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன்படி ராஜ் குந்த்ராவின் பார்ட்னரான சவுரா குஷ்வா வாக்குமூலம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜ் குந்த்ரா ஆபாச படங்களுக்காக தான் ஹாட் ஷாட்ஸ் செயலியை உருவாக்கினார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் மொபைல், ஹார்டிஸ்க், லேப்டாப் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும் அதனை ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜாமீன் கோரி ராஜ் குந்த்ரா தாக்க செய்துள்ள மனுக்களை மும்பை நீதிமன்றம் தள்ளூபடி செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் மீண்டும் ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது ராஜ் குந்த்ராவுக்கு ஐம்பது ஆயிரம் பிணைத்தொகையுடன் ஜாமீன் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

இரண்டு மாதங்களுக்கு பிறகு ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ராஜ் குந்த்ராவின் மனைவி ஷில்பா ஷெட்டியின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர். அந்த வாக்குமூலத்தில், ‘தான் வேலையில் மிகவும் பிஸியாக இருந்ததால் தனது கணவர் ஆபாச படம் எடுத்து வந்தது தனக்கு தெரியாது. மேலும் ஹாட் ஷாட்ஸ் மற்றும் பாலிஃபேம் உள்ளிட்ட செயலிகள் குறித்தும் தனக்கு தெரியாது’ என தெரிவித்துள்ளார். தனது கணவர் ஆபாச படம் தயாரித்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை பிரியும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியானது. அதே போல் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஷில்பா ஷெட்டி தனது கணவரை பிரிய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஷில்பா ஷெட்டியின் ரூ.97.79 கோடி சொத்துகள் முடக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
shilpa shetty ed fraud case update

2017ஆம் ஆண்டு பிட் காயின் மூலம் 6,600 கோடி மோசடி செய்ததாக வேரியபிள் டெக் நிறுவனம் மீது டெல்லி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிறுவனத்தை அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் மறைந்த அமித் பரத்வாஜ் ஆகியோர் நடத்தி வந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவுசெயப்பட்டது. இதையடுத்து இந்த விவாகாரத்தில் அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு இந்த மோசயில் தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்தன. மறைந்த அமித் பரத்வாஜிடமிருந்து, ரூ.150 கோடிக்கும் மேல் ராஜ் குந்த்ரா பெற்றதாக தெரிய வந்தது. அதனடிப்படையில் ராஜ் குந்த்ராவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.   

shilpa shetty ed fraud case update

இந்த நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ. 97.79 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஒரு பங்களா, ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள், ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜூஹுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.