2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பிரதமர், மற்றும் நிதியமைச்சரை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

rahul gandhi tweet about budget 2020

Advertisment

இந்நிலையில், மோடி மற்றும் நிர்மலா சீதாராமனை தனது ட்விட்டர் பக்கத்தில்விமர்சித்துள்ள ராகுல், "மோடியும் அவரது பொருளாதார ஆலோசகர்களின் கனவுக் குழுவும் உண்மையில் நமது பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பியுள்ளனர்.

Advertisment

முன்னதாக:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: 7.5%

பணவீக்கம்: 3.5%

இப்போது:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: 3.5%

பணவீக்கம்: 7.5%

அடுத்து என்ன செய்வது என்று பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் சுத்தமாக தெரியாது" என பதிவிட்டுள்ளார்.