Skip to main content

“மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமையடையாமல் இருக்கிறது”  - ராகுல் காந்தி

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Rahul Gandhi says The Women's Reservation Bill is incomplete

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று (20-09-23) தொடங்கி நடைபெற்றது.

 

இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பெண்களுக்கு அளிக்கப்படும் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு இல்லாமல் இருப்பதால் இந்த மசோதா முழுமையடையாமல் இருக்கிறது. மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள் தேவைப்படுகிறது? அதனால் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை செய்த பிறகு தான் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி பிரிவினருக்கான ஒதுக்கீட்டையும் சேர்க்க வேண்டும். அதுபோல், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை அழைத்திருக்க வேண்டும்” என்று கூறினார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்; “நாட்டுக்கு இரண்டு அரசியல் சட்டம் எப்படி இருக்க முடியும்?” - அமித்ஷா கேள்வி 

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Revocation of Kashmir special status issue on Amitsha Questioned How can a country have two constitutions?

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று (05-12-23) இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீது விவாதம் நடந்தது.

 

இந்த விவாதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சியாம பிரசாத் முகர்ஜி பெயர் கொண்ட கல்லூரியில் நான் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளேன். ‘ஒரே கொடி, ஒரே பிரதமர், ஒரே அரசியல் சட்டம்’ என்பது தான் அவர்களது கோஷம். அது ஒரு அரசியல் கோஷம்” என்று பேசினார். 

 

உடனே குறுக்கிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டுக்கு 2 கொடி, 2 பிரதமர்கள் எப்படி இருக்க முடியும்?. ‘ஒரே கொடி, ஒரே பிரதமர், ஒரே அரசியல் சட்டம்’ என்பது அரசியல் கோஷம் அல்ல. அந்த தத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாட்டுக்கு ஒரே கொடி, ஒரே பிரதமர், ஒரே அரசியல் சட்டம் தான் இருக்க வேண்டும் என்பதை கடந்த 1950ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் சொல்லி வருகிறோம். அதன்படி தான் நாங்கள் செய்துள்ளோம். அரசியல் சட்டம் 370வது பிரிவை யார் அமல் செய்திருந்தாலும் அது தவறு தான். அதை நரேந்திர மோடி சரி செய்தார். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ பிரச்சனையே இல்லை. ஆனால், மக்கள் அதை விரும்புகின்றனர். சவுகதா ராய் பேசியது ஆட்சேபனைக்குரியது” என்று பேசினார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“ராகுலை எதிர்த்து நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம்..” - பினராயி விஜயன்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

"We will field a candidate against Rahul." - Pinarayi Vijayan

 

தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மிசோரம் மாநிலத்தில் மாநிலக் கட்சியான சோரம் மக்கள் இயக்கம் எனும் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மற்ற மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்றாக காங்கிரஸ் கட்சி தேர்தல் நடந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணியின்படி மாநில கட்சிகளுடன் சுமுக உறவை கையாளாமல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் கடுமையான போக்கு கடைபிடித்ததே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ‘ராகுல் பா.ஜ.க.வை எதிர்த்து போராடப் போகிறாரா அல்லது இடதுசாரிகளை எதிர்த்து போராடப் போகிறாரா’ என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

கேரளா மாநிலம், திருச்சூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; 2024 தேர்தல் களத்தில் கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடப் போகிறாரா அல்லது இடதுசாரிகளை எதிர்த்து போராடப் போகிறாரா என்பதை காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும். கேரளத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று காங்கிரஸ் நினைத்தால் ராகுலை எதிர்த்து வயநாடு தொகுதியில் எங்கள் கூட்டணியும் வேட்பாளரை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்