Skip to main content

நாடாளுமன்றம் நோக்கி ராகுல்; உச்சக்கட்ட பரபரப்பில் டெல்லி! 

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

Rahul Gandhi ask permission to speak in parliament tomorrow

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு தொடங்கிய முதல் நாளிலிருந்து நான்காவது நாளான இன்று வரை ஆளுங்கட்சி எம்.பி.க்கள், ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தது தவறு என்றும் அதற்கு அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதானி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நான்காவது நாளான இன்றும் நாடாளுமன்றம் முழுவதுமாக முடக்கப்பட்டது. 

 

Rahul Gandhi ask permission to speak in parliament tomorrow

 

நேற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இங்கிலாந்தில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கள் இந்திய ஜனநாயக அமைப்புகளையும், நாடாளுமன்றத்தையும் இழிவுபடுத்தும் செயல். ஒவ்வொரு குடிமகனும் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறான். ஏனென்றால் நாடாளுமன்றம்  என்பது எம்.பி.க்கள் இணைந்த அமைப்பு மட்டமல்ல; அது இந்திய மக்களின் குரல். எனவே நாடாளுமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக நாடாளுமன்றத்துக்கு வராமல் புறக்கணித்துள்ளார் ராகுல்” என்று குற்றச்சாட்டு வைத்தார். 

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. ராகுல் காந்தி, “இன்று(16ம் தேதி) காலை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் நான் பேச வேண்டும் என தெரிவித்துள்ளேன். நான்கு அமைச்சர்கள் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதன் காரணமாக எனது பார்வையை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க உரிமை உள்ளது. நிச்சயம் நாளை(17ம் தேதி) நாடாளுமன்றத்தில் பேச எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என நம்புகிறேன்.

 

Rahul Gandhi ask permission to speak in parliament tomorrow

 

சில நாட்களுக்கு முன்பு மோடி மற்றும் அதானி குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால், அந்தப் பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. நான் மக்களுக்கு தெரியாத விஷயங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசவில்லை. 

 

அரசும் பிரதமரும் அதானி விவகாரம் குறித்து பயப்படுகிறார்கள். அதன் காரணமாக நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தோன்றுகிறது. அதானிக்கும் மோடிக்கும் இடையான உறவு என்ன என்பதே முக்கிய கேள்வி.

 

Rahul Gandhi ask permission to speak in parliament tomorrow

 

என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் நான் பேச வேண்டியது என்பது எனது ஜனநாயக உரிமை. இந்திய ஜனநாயகம் இயங்குகிறது என்றால் என்னால் நாடாளுமன்றத்தில் பேச முடியும். நீங்கள் பார்ப்பது இந்திய ஜனநாயகத்தின் சோதனை” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.