Skip to main content

நாட்டு வெடிகுண்டு வீசி இரண்டு ரவுடிகள் கொலை!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

puducherry rowdies incident police investigation

 

புதுச்சேரி வானரப்பேட்டையின் பிரபல ரவுடிகள் பாம் ரவி மற்றும் அந்தோணி. இவர்கள் இருவரும் இன்று (24/10/2021) பிற்பகல் அலைன் வீதியில் இருசக்கர வாகனத்தில் நின்றப்படி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுற்றி வளைத்து நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் நிலைகுலைந்த ரவுடிகள் சுதாரிப்பதற்குள் மர்ம நபர்கள் கத்தி மற்றும் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். அப்போது அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே, அனைவரும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். 

 

இதுகுறித்து தகவலறிந்த முதலியார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பாம் ரவி மற்றும் அந்தோணியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இருவரும் இறந்துவிட்டனர் என மருத்துவர்கள் கூறினர்.

 

இந்த சம்பவம் காட்டுத்தீ போல் புதுச்சேரி முழுவதும் பரவியதையடுத்து, வானரப்பேடையைச் சேர்ந்த 500- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் மேலும் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. புதுச்சேரி மாநில கிழக்கு பிரிவு எஸ்.பி தீபிகா தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 

 

இதனையடுத்து, சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகள் மூலமும், மோப்பநாய் உதவியுடனும் தடயங்களை சேகரித்து  விசாரித்து வருகின்றனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் பழைய ரவுடிகளான பாம் ரவி மற்றும் அந்தோணி,  தற்பொழுது ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ முயற்சி செய்து வருகின்றனர். இருந்தாலும், பழைய முன்விரோதம் மற்றும் தொழில் போட்டி காரணமாக, இந்த கொலை நடந்துள்ளது. மேலும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாம் ரவி முயற்சி செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பாம் ரவியும், அந்தோணியும் படுகொலை செய்யப்பட்டனர்.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பா.ம.க. மாவட்டச் செயலாளர் தேவமணி நேற்று முன்தினம் (22/11/2021) இரவுதான் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

புதுச்சேரியில் சமீப காலமாக கொலை, கொள்ளைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தற்போது பட்டப்பகலில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு மத்தியில் ரவுடிகள் வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும், படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.