Skip to main content

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-51

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

PSLV C-51 launched into the sky

 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் தற்பொழுது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தற்பொழுது விண்ணில் ஏவப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-51 -ல் உள்ள சேட் செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. அதேபோல் பகவத்கீதையின் வாசகம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த ராக்கெட்டில் அமேசான் காட்டை குறித்து ஆராய்வது தொடர்பான 'அமேசானியா-1' என்ற பிரேசில் செயற்கைகோள், பாதுகாப்பு படையினர் பயன்பாட்டுக்காக இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா என்ற செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்கள் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் முதல் கட்ட செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

637 கிலோ எடை கொண்ட பிரேசிலின் அமேசானியா-1 செயற்கைகோளின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். அதேபோல் இந்த ராக்கெட்டில் சென்னை, கோவை கல்லூரி மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்