உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gkj.jpg)
மேலும், கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க அரசு தனிமனித இடைவெளியையும், முகக் கவசத்தையும் அணியுமாறு கூறியுள்ளது. தற்போது போதுமான முகக் கவசம் நாட்டில் இருக்கிறது என்று மத்திய அரசு கூறிவந்தாலும், மருந்துக் கடைகளில் மாஸ்க் இல்லை என்றே சொல்லப்படுகின்றது. இதனால் தன்னார்வலர்கள் மற்றும் சில சிறிய நிறுவனங்கள் முழு நேரப் பணியாக முகக் கவசங்களைத் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மனைவி சவீதா கோவிந்த் அவர்களும் இந்தப் பணியில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையின் ஒரு அறையில் தினமும் காலை முதல் மாலை வரை அமர்ந்து முகக் கவசத்தை அவர் தயாரித்து வருகிறார். இந்த முகக் கவசத்தை தில்லியில் உள்ள குடிசை பகுதி மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த முயற்சிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)