Skip to main content

செல்ஃபி எடுக்க மறுத்த பிரித்வி ஷா மீது தாக்குதல்; யூடியூப் பெண் பிரபலம் உட்பட 8 பேர் கைது

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

nn

 

அண்மையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில், செல்போனை வாங்கி பின்னோக்கி எரிந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தாக்கப்படுவது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

 

மும்பை ஓஷிவாரா பகுதியில் உள்ள ஹோட்டலில் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தனது நண்பருடன் இருந்த பொழுது யூடியூப் பிரபலமாக இருக்கும் பெண் ஒருவரும் ஆணும் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பப்பட்டு அவரை அணுகியுள்ளனர். ஆனால், பிரித்வி ஷா செல்ஃபி எடுக்க மறுத்துள்ளார். தொடர்ந்து பலமுறை கேட்டும் அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து அவர்களை வெளியேற்றுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த யூடியூப் பிரபலம் ஹோட்டலை விட்டு வெளியேற்றப்பட்டார்.

 

பின்னர் வெளியே வந்த பிரித்வி ஷாவை சப்னா கில் என்ற அந்த பெண் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக சப்னா கில் உட்பட 8 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்