Skip to main content

"கரோனா நடைமுறைகளை கண்காணிக்குமாறு காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது"-தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை!

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

 "Police should not be pressured to monitor corona practices" - tvk demand!

 

புதுச்சேரியில் கரோனா நடைமுறைகளைக் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் சி.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா விதிமீறல் ஈடுபடுபவர்களை தமிழக அரசு வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து அபராதம் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் புதுவையில் காவல்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமையாக மாஸ்க் அணியாமல் செல்பவர்களை, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 நபர்களுக்கு அந்தந்த காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அபராதம் விதிக்க வேண்டுமென்று உயரதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் காவல் நிலைய பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது.

 

ஒருபக்கம் வழக்கமான சட்டம்- ஒழுங்கு காவல் பணியில் ஈடுபட வேண்டி உள்ளது. இன்னொரு பக்கம் கரோனா விதிமுறை மீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இது காவல்துறையில் உள்ள நபர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரித்துள்ளது. மேலும் பல காவல்துறையினர் மனவேதனையில் உள்ளதாகக் கூறுகின்றனர்.

 

தமிழகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யும்போது புதுவையில் மட்டும் கூடுதலாக காவல்துறைக்கு பணிச்சுமை கொடுப்பது கண்டனத்துக்குரியது. அதேபோல் இந்நாள்வரை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. புதுவை அரசு உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்டு  கரோனா நடைமுறைகளில் ஈடுபடுவதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.