Skip to main content

386 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதாக காவல்துறை பகீர்; நீதிமன்றம் அதிர்ச்சி

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Police claim rats ate 581 kg of ganja; The court was shocked

 

மதுராவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து காவல்துறையினர் 581 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 700 கிலோ கஞ்சா உத்திரப்பிரதேச மாநிலம், மதுரா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தன. கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

பறிமுதல் செய்யப்பட்ட 386 கிலோ கஞ்சா ஷெர்கா காவல் நிலையத்திலும், 196 கிலோ கஞ்சா நெடுஞ்சாலை காவல்நிலையத்திலும் வைக்கப்பட்டு இருந்தது.

 

நீதிமன்றத்தில் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்க, பறிமுதல் செய்த கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் கஞ்சா மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 

 

இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் பறிமுதல் செய்த மொத்த கஞ்சாவையும் ஒப்படைக்க உத்தரவிட்டது. நெடுஞ்சாலை காவல்நிலையத்தில் உள்ள கஞ்சா பொட்டலங்கள் மழையால் சேதமடைந்துவிட்டது என்று அந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் கூறியுள்ளார். ஷெர்கா காவல்நிலைய ஆய்வாளர், “ஸ்டோர் ரூமில் எலித்தொல்லைகள் அதிகமாக உள்ளதால்,  பறிமுதல் செய்து வைத்திருந்த கஞ்சா அனைத்தையும் எலிகள் சாப்பிட்டுவிட்டன. எனவே அனைத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர்.

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.