Skip to main content

“இ.ந்.தி.யா கூட்டணியினர் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிரானவர்கள்” - பிரதமர் மோடி

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

 PM Modi says INDIA Alliance Against Women's Reservation Bill

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

 

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அசோக் கெலாட் ஆட்சியையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பா.ஜ.க சார்பில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் அரசின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவெடுத்து விட்டனர். அசோக் கெலாட் அரசு, ராஜஸ்தான் இளைஞர்களின் ஐந்தாண்டு காலத்தை வீணடித்துவிட்டது. ராஜஸ்தானில் விரைவில் மாற்றம் வரும். ஊழலுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்று உத்தரவாதம் அளித்தோம். அதன் அடிப்படையில், இன்று ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 

காங்கிரஸ் கட்சியால் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. ஏனென்றால், மகளிருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிரானவர்கள். இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நான் கொண்டு வரவில்லை. உங்களின் ஆதரவால் தான் இது சாத்தியமானது.  சனாதனத்தை அழிக்க நினைக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். இந்த தேர்தலில் மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு ராஜஸ்தான் மாநிலம் பாடம் கற்பிக்கும். மேலும், அவர்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுவார்கள்” என்று பேசினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜ்புத் இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை; வலுக்கும் போராட்டம்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Rajput Movement leader lost his life and protest to get stronger

 

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. இவரது வீடு ஜெய்ப்பூரில் உள்ள ஷ்யாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், சுக்தேவ் சிங் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென்று அவரது வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையே, சுக்தேவ் சிங் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, சுக்தேவ் சிங்கின் பாதுகாவலரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தை நடத்திய அந்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுக்தேவ் சுங் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊரில் 50 வாக்குகள் கூட வாங்காதது எப்படி?” - கமல்நாத் கேள்வி

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

KamalNath Questioned on How come Congress MLAs don't even get 50 votes in their hometown?

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

 

அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல், மிசோரமில் ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதில், 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் 163 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 66 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அம்மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான போட்டி இருக்கும் என கணித்த நிலையில், காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது அக்கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதனிடையே, இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சிப் பொருத்தப்பட்ட இயந்திரத்தை ஹேக் செய்து தேர்தல் முடிவை மாற்ற முடியும் என்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருந்தார். அதே போல், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊரில் 50 வாக்குகள் கூட வாங்காதது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்நாத், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவர்களது சொந்த கிராமத்தில் 50 வாக்குகள் கூட பெறவில்லை என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்?. இதுபற்றி ஆலோசனை நடத்தாமல் ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. முதலில் இது பற்றி அனைவரிடமும் பேசுவேன். மக்களின் மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக தான் இருந்தது. உங்களுக்கு கூட தெரியும் என்ன மனநிலை என்று. ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?. மக்களிடம் கேளுங்கள்” என்று கூறினார். 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்