Skip to main content

திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி - ஆந்திர அரசு தகவல்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

jk


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 
 


இந்தியாவில் இதுவரை நான்கு கட்ட ஊரடங்கு முடிவடைந்து 5ஆம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள் முதலியன மூடப்பட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் படி வரும் 8ஆம் தேதி முதல் தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் திருப்பதி கோயிலில் சோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதிப்பது என்று ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது. விரைவில் இந்த முயற்சி நடைமுறைக்கு வர இருப்பதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்