Skip to main content

ஒடிசா மாநிலத்திற்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரக் கூறி பிரதமருக்கு பட்நாயக் கடிதம்!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஒடிசா மாநிலத்தில் கடந்த வாரம் தாக்கிய ஃபானி புயலால் சுமார் 15 மாவட்டங்ககளில் உள்ள வீடுகள் மிகுந்த சேதம் அடைந்ததாகவும் , இதில் பூரி மாவட்டத்தில் அதிக அளவில் வீடுகள் சேதமாகியுள்ளதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதத்தில் ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல் பாதிப்பால் சுமார் 10 லட்சம் மக்கள் முகாம்களில் இருப்பதாகவும் , படிப்படியாக சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்த பட்நாயக் புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் (PMAYs)சுமார் 5 லட்சம் சிறப்பு வீடுகளை கட்டித் தரவேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் மத்திய அரசு பங்குடன் ஒடிசா மாநில அரசின் நிதி உதவியுடன் வீடுகளை கட்டித்தர என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு விரைவில் ஒடிசா மாநிலத்திற்கு விரையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒடிசாவில் அம்மாநில முதல்வர் பட்நாயக் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால் உயிரிழப்புகள் குறைந்தது என அனைத்து மாநில முதல்வர்களும் ஒடிசா முதல்வரை பாராட்டினர்.

 

 

LETTER

 

அதே போல் பிரதமர் நரேந்திர மோடியும் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து ஒடிசா முதல்வர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பாராட்டினார். இந்நிலையில் புயல் கடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் நிலையில் அந்த மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. ஒடிஷா மாநிலத்திற்கு தமிழக அரசு 10 கோடியும் , ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஒடிசா மாநிலத்தின் மறுக்கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 10 கோடியை வழங்கினார். மற்ற மாநில முதல்வர்கள் , தொழிலதிபர்கள், இந்திய மக்கள் உட்பட அனைவரும் ஒடிசா மாநில மக்களுக்கு உதவி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்னலில் குறுக்கிட்டது யார்? - விசாரணையை தொடங்கிய சிபிஐ

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Who interfered in the scandal?-CBI initiated investigation

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தது உலக அளவில் சோகத்தையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க இந்திய ரயில்வே பரிந்துரைத்திருந்தது. அதன்படி நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள், ரயில்வே அதிகாரிகள் உட்பட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

 

இந்த விபத்தில் தவறான சிக்னல் முக்கியக் காரணியாக இருக்கிறது. செய்தியாளர்களைச் சந்தித்திருந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'இண்டெர்லாக்கிங் சிக்னல் சிஸ்டம் மிகவும் நம்பகமானது' என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சிஸ்டத்தில் ஒரு சிக்னல் பழுதானால் அனைத்து சிக்னல்களும் சிவப்பு நிறமாக மாறி அனைத்து ரயில்களையும் நிறுத்தி விடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்டமிட்ட இடையூறு இல்லாமல் மெயின் லைனுக்கான பாதையை லூப் லைனுக்கு மாற்றுவது சாத்தியம் இல்லாத ஒன்று எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் சிக்னலில் குறுக்கிட்டது யார் என்பது தொடர்பான விசாரணையில் சிபிஐ மும்முரம் காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

முறையற்ற உறவு; தேசிய விருது வென்ற நடிகையை விரட்டி விரட்டி அடித்த நடிகரின் மனைவி

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

Prakruti Mishra assaulted by costar babhushaan wife

 

ஒடிசா மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரக்ருதி மிஸ்ரா. இவர் பாபுஷான் மொஹந்தி என்பவருடன் இணைந்து பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். அண்மையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர். அதற்காக புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு நடிகை பிரக்ருதி மிஸ்ராவும், நடிகர் பாபுஷான் மொஹந்தி இருவரும் ஒன்றாக இணைந்து காரில் சென்றுகொண்டிருந்தனர்.

 

அப்போது திடீரென காரை வழி மறைத்த நடிகர் பாபுஷான்  மனைவியான திருப்தி மொஹந்தி நடிகர், நடிகை இருவரையும் பலமாக தாக்கியுள்ளார். இதனால் காரில் இருந்து இறங்கி ஓடிய நடிகையை சாலையில் ஓட ஓடவிட்டு பாபுஷானின் மனைவி அடித்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து தப்பித்த நடிகை பிரக்ருதி மிஸ்ரா ஆட்டோ ரிக்ஷாவில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை பிறகு இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து நடிகை பிரக்ருதி மிஸ்ராவின் தாய் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். 

 

ad

 

இந்நிலையில் இவரைத் தொடர்ந்து நடிகர் பாபுஷானின் மனைவி திருப்தி மொஹந்தி, தன்னுடைய கணவரை பிளாக்மெயில் செய்து நடிகை பிரக்ருதி மிஸ்ரா அவருடன் வாழ நிர்ப்பந்தித்து வருவதாகவும், அவர் எங்கள் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு எங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருந்தது என்றும், அவர் வந்ததால் தற்போது நிம்மதி இழந்து தவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த கோபத்தில் தான் நான் இப்படி நடந்து கொண்டதாகவும், எனக்கும் என் பிள்ளையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

 

நடிகை பிரக்ருதி மிஸ்ரா கடந்த ஆண்டு ஹலோ அர்சி என்ற படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.