Skip to main content

மத்திய சட்டத்துறை அமைச்சகம், தபால் அலுவலகம் அல்ல! -மத்திய அமைச்சர் காட்டம்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
ravi shankar prasad


சட்டத்துறை அமைச்சகம் தபால் அலுவலகம் அல்ல என்று கோபமாக பேசியிருக்கிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்! அவரின் கருத்துகள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. 

                         
அகில பாரதிய அதிவக்த பரிஷத்தின் பேராசிரியர் மாதவமேனனின் நினைவு கருத்தரங்கம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘’கேரளாவிலுள்ள அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து பாலினத்தவரும் செல்லலாம், வழிபடலாம் என்கிற தீர்ப்பை கடுமையாக எதிர்த்தவர் பேராசிரியர் மாதவமேனன். காலகாலமாக உள்ள மக்களின் நம்பிக்கையில் நீதிமன்றங்கள் தலையிடும்போது எச்சரிகையாக இருக்க வேண்டும். அரசியலமைப்புக்கு எதிராக மக்களின் நம்பிக்கை இருந்தால் தலையிடலாம். மாறாக, பண்பாட்டுரீதியாக உள்ள மக்களின் நம்பிக்கையை கேள்விக் குறியாக்கும் வகையில் தீர்ப்பளிப்பது வழுக்கும் சாலைகளில் கால் வைப்பதற்கு சமமாகும். 

                          
நீதிபதிகளை நியமிக்கும் ’தேசிய நீதிபதிகள் ஆணையம்’ என்கிற சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தது. இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேறியது. ஆனால், அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை நாங்கள் மதிக்கின்றோம். விவாதிக்கவும் தயார். இன்னும் சொல்லப்போனால், நீதிபதிகளை நியமிக்கும் நீதிபதிகளின் கொலீஜியத்தை மதிக்கின்றோம். அதற்காக, சட்டத்துறை அமைச்சகம் தபால் அலுவலகம் போல செயல்படாது. சட்டத்தை இயற்றும் பங்களிப்பாளர்கள் நாங்கள் என்பதால் எங்களின் கடமையிலிருந்து விலகிவிட முடியாது‘’ என்றிருக்கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இவரின் இந்த கருத்துகள்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.