Skip to main content

''காங்கிரஸில் புது ரத்தம் பாய்ச்சப்படும்... ஆனால் காங்கிரஸையும் நேரு குடும்பத்தையும் பிரிக்க முடியாது''-நாராயணசாமி பேட்டி

Published on 17/10/2022 | Edited on 17/10/2022
nn

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயணசாமி பேசுகையில், ''காங்கிரஸ் கட்சியையும் நேரு குடும்பத்தையும் பிரிக்க முடியாது. எப்படி மகாத்மா காந்திக்கு பிறகு பண்டிதர் நேருவும், சோனியா காந்தியும், அவருக்குப் பிறகு ராஜீவ் காந்தியும், அவருக்கு பிறகு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினுடைய வளர்ச்சிக்காகவும், இந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதேபோல் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்த இருவரில் யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள்,  சோனியா காந்தி, ராகுல் காந்தி  வழிகாட்டுதலுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் வந்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியினு டைய தலைவர் தேர்தல் முடிந்த பிறகு 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அறிவிக்கப்படுவார். அதன் பிறகு பல மாநிலங்களில் மாற்றம் ஏற்படும். மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மாற்றப்படுவார்கள். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினுடைய பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் இந்த தலைவர் தேர்வு உறுதி செய்யப்படும். அதேபோல் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் உறுதி செய்யப்படுவார்கள். காங்கிரஸ் கட்சி ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துகின்ற காரணத்தால் காங்கிரஸில் அடிப்படையிலிருந்து ஜனநாயகம் தழைத்தோங்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.