Skip to main content

நாடு தழுவிய வேலை நிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அழைப்பு!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

Nationwide strike: Trade unions call!

 

நாடு முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் நடக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 25 கோடி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு அரசுத்துறைகளின் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

'மக்களை காப்போம்; நாட்டைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் நாளையும் (28/03/2022), நாளை மறுநாளும் (29/03/2022) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறை நிறுவன தனியார் மயமாக்கல் கைவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

பெரும்பாலான மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி, நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைத்தொடர்பு, தபால், வருமான வரித்துறை உள்ளிட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 25 கோடி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர். 

 

ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அண்ணா தொழிற்சங்கம், மஸ்தூர் ஆகியவை அறிவித்துள்ளனர். 

 

வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் கலந்துக் கொள்ளக் கூடாது என்றும், இரண்டு நாட்களுக்கு வேலை வராத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 

தமிழகத்தில் போக்குவரத்து, மின்துறைகள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிகிறது. எல்ஐசி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் இரண்டு நாட்கள் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக, இரண்டு தினங்களுக்கு தங்களின் சேவைகள் ஓரளவுக்கு பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. 

 

ரயில்வே துறையில் சில சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால், ரயில்வே பணிகளும் ஓரளவுக்கு பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்பு கடிதம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
letter of retired IAS, IPS officers to Election Commissioner
தலைமை தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இது தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.

ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.