Skip to main content

4 குழந்தைகளைக் கிணற்றில் வீசிய தாய்; அரங்கேறிய கொடூரம்!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Mother throws 4 children into a well in Madhya Pradesh

மத்தியப்பிரதேச மாநிலம் மாண்ட்சார் மாவட்டத்தில் உள்ள பிபல்கேடா கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரோட்டு சிங் - சுகுணா பாய் தம்பதியினர். இந்தத் தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரோட்டு சிங்கிற்கும் அவரது மனைவி சுகுணா பாய்க்கும் இடையே குடும்ப பிரச்சனைத் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.  

ஒரு கட்டத்தில் இந்தத் தகராறு முற்ற, மனைவி சுகுணா பாய் கோபித்துக்கொண்டு தனது 4 குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுடன் சுகுணா பாய் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அருகே உள்ள கிணற்றில் தனது 4 குழந்தைகளையும் வீசிய சுகுணா பாய், அதே கிணற்றில் தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கவனித்த அப்பகுதியினர் உடனடியாக கிணற்றில் குதித்து சுகுணா பாயை காப்பாற்றினர். ஆனால் அவரது 4 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு 4 குழந்தைகளின் உடலை சடலமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்