Skip to main content

'நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதை இது காட்டுகிறது' - பிரதமர் மோடி உரை

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
modi speech

 

பிரதமர் மோடி இன்று 10 மாநில முதல்வர்களுடன் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் முடிவுக்கு பிறகு கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி பேசுகையில்,

 

நாட்டில் 80% கரோனா தொற்று 10 மாநிலங்களில் உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் கரோனாவிற்கு எதிராக போராடி வருகிறது. பீகார், உத்திரபிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்  பரிசோதனைகளை அதிகரிக்கவேண்டும். இறப்பு குறைந்து குணமடைந்தோர் விகிதம் அதிகரிப்பது நம் சரி நாம் சரியான பாதையில் செல்வதை காட்டுகிறது. கரோனா பணியில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்