Skip to main content

சோம்நாத் குறித்து மோடி புகழாரம்...

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
somnath

 

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி (89) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார்.

 

சோம்நாத் சட்டர்ஜி சிறுநீரகம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்தார்.

 

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இடம் பெற்றிருந்த சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற எம்.பி.யாகவும் 10 முறை இருந்தார். 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில்,”முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நாடாளுமன்றத் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர். ஏழைகளுக்கும், பாதிக்கபட்டோருக்கும் குரல் கொடுத்தவர், இந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர்” என்று சோம்நாத் சாட்டர்ஜியை புகழ்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

  

சார்ந்த செய்திகள்

 

Next Story

கலைஞரின் நெருங்கிய நண்பர் சோம்நாத் சாட்டர்ஜி: மு.க.ஸ்டாலின்

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
somnath


சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளயிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

தலைசிறந்த பாராளுமன்ற ஜனநாயகவாதியும், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட முன்னாள் மக்களவைத் தலைவரும், நடுநிலை தவறாத நாயகரும், மக்களவைத் தலைவர்களில் தனிச் சிறப்புமிக்கவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சோம்நாத் சாட்டர்ஜி மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டி காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மன மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொன் விழாவில் கலைஞர் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஆரோக்கியமான அரசியல் கருத்துகளுக்கும், ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும் பாராளுமன்றத்தில் இடம் கொடுத்து ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச்சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story

சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்!

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
Somnath


 

 

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி (89) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார்.

சோம்நாத் சட்டர்ஜி சிறுநீரகம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இடம் பெற்றிருந்த சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற எம்.பி.யாகவும் 10 முறை இருந்தார். 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.