Skip to main content

'பாலியல் வன்கொடுமைகளுக்கு தொலைபேசியே காரணம்' - உ.பி மகளிர் ஆணைய உறுப்பினரின் கருத்தால் சர்ச்சை! 

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

meenakumari

 

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் மகளிரிடம் குறைகேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மீனா குமாரி கலந்துகொண்டார். அப்போது அவரிடம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கேள்வியெழுப்பட்டது.

 

அதற்கு பதிலளித்த மீனாகுமாரி, "பெண்கள் எப்போதும் கடுமையான கண்காணிப்பின் கீழ்  இருக்க வேண்டும். அவர்கள் எங்கு செல்கிறார்கள், யாருடன் செல்கிறார்கள் என்பதை சோதனை செய்ய வேண்டும். பெண்களுக்கு தொலைபேசியை கொடுக்கக்கூடாது. பெண்கள் ஆண்களுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுகிறார்கள், பின்னர் அவர்களுடன் ஓடிவிடுகிறார்கள். அவர்களது தொலைபேசி சோதிக்கப்படுவதில்லை. குடும்பத்தினருக்கும் இதுகுறித்து தெரிவதில்லை" என கூறினார்.

 

மகளிர் ஆணைய உறுப்பினரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  அவரது கருத்து சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனது கருத்து குறித்த விளக்கமளித்துள்ள மீனாகுமாரி,  "கிராமங்களை சேர்ந்த சிறுமிகளுக்கு சரியான முறையில் தொலைபேசிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாது. ஆண்களோடு நண்பர்களாக தொலைபேசியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். பின்னர் அவர்களோடு ஓடி விடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் கூறினேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.