Skip to main content

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்"- எம்.எல்.ஏ. தலைமையிலான கூட்டத்தில் வலியுறுத்தல்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

MLA emphasis Decision on Statehood for Puducherry

 

’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை’ என்பது தொடர்பாக சுமார் 20-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் புதுச்சேரி தனியார் ஓட்டலில் நேரு எம்.எல்.ஏ. தலைமையில், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலாளர் ஸ்ரீதர், தமிழர் களம் மாநில அமைப்பாளர் கோ.அழகர், மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகன்நாதன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீர.மோகன், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்று 11 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே மத்திய அரசால் நியமிக்கப்படும் அரசு அதிகாரிகள் புதுச்சேரி சட்டமன்றத்தை மதிப்பதில்லை. வேலை வாய்ப்பின்மையால் புதுச்சேரி இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயர்ந்த பதவியில் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தற்போது பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதற்கு வயது தளர்வு வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் புதுவை மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்களால் தேர்வான முதல்வரின் அதிகாரத்தைப் பறிக்கும் விதமாகவே அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துணைநிலை ஆளுநரும், தலைமைச் செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தடையாக இருக்கிறார்கள். அதிகாரிகள் சொல்வதைக் கேட்க வேண்டிய நிலைமை அரசுக்கு உள்ளது. 

 

MLA emphasis Decision on Statehood for Puducherry

 

இந்தியாவில் 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மிசோரம், சிக்கிம் மாநிலங்களுக்கு மாநிலத் தகுதி இருக்கும்போது 14 லட்சம் மக்கள்தொகை கொண்ட புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராதது வியப்பளிக்கிறது. எனவே சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற தீர்மானத்தை மீண்டும் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

 

மேலும், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், அதில் முதல் கட்டமாக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கங்கள் நடத்துவது குறித்தும், போராட்டங்கள் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என  நேரு எம்.எல்.ஏ. தனது பேட்டியின் போது தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.