Skip to main content

மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; உ.பி. அரசு விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம்  உத்தரவு!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Minority student case UP Supreme Court orders government to explain

 

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாஃபர் நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர், தனது வகுப்பில் பயிலும் குழந்தைகளில் ஒரு இஸ்லாமிய மாணவரை அடிக்கும்படி, சக மாணவர்களுக்குச் சொல்லும்படியான வீடியோ அண்மையில் வெளியாகி இருந்தது. அதுமட்டுமின்றி அந்த ஆசிரியர், சிறுவனுடைய இஸ்லாமிய மதத்தைக் குறிப்பிட்டு, “முகமதிய குழந்தைகள்” எனவும் “இந்த இஸ்லாம் குழந்தைகள் அனைவரும் எந்தப் பகுதிக்காவது செல்லுங்கள்” என்று இழிவாகப் பேசியிருந்தார்.

 

மேலும் அந்த வீடியோவில், அந்த இஸ்லாமிய மாணவனை அறைந்துவிட்டு உட்கார்ந்த இன்னொரு மாணவனை பார்த்து ஆசிரியை திரிப்தா தியாகி, “ஏன் இவ்வளவு லேசாக அடிக்கிற? அவனை கடுமையாக அடி” என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 

அதே சமயம் அந்த பள்ளி ஆசிரியை திரிப்தா தியாகி  ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டு இருந்தார். அதில் மாணவர்கள் தங்கள் வகுப்பு இஸ்லாம் மாணவனை அறையச் சொன்னதன் பின்னணியில் தனக்கு எந்தவித வகுப்புவாத நோக்கமும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க 25 ஆம் தேதிக்குள் உத்திர பிரதேச அரசு விளக்கமளிக்க ஆனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய முசாஃபர் நகர் போலீஸ் எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் பட வில்லன் நடத்திய துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு

 

TV actor Bhupinder Singh arrested

 

இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் பூபிந்தர் சிங். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் விஜய் நடித்த பத்ரி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

உத்தர பிரதேசம் பிஜ்னோர் பகுதியில் வாழ்ந்து வரும் இவருக்கும் அருகில் இருக்கும் குர்தீப் சிங் என்பவருக்கும் மரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. குர்தீப் சிங்கின் தோட்டம் பூபிந்தர் சிங் இல்லத்திற்கு அருகில் இருப்பதால், தோட்டத்தில் இருக்கும் யூகலிப்டஸ் மரம் வெட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் பிரச்சனை வந்துள்ளது. அப்போது, பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்களும் உரிமம் பெற்ற ரிவால்வர் மற்றும் சட்டவிரோத துப்பாக்கியுடன் குர்தீப் சிங்கின் குடும்பத்தினரை சுட்டுள்ளனர். 

 

அதில் குர்தீப் சிங் மகன் கோவிந்த் (23) இறந்துள்ளார். மேலும் குர்தீப் சிங், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்த டிஐஜி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தகவல்களை பெற்று பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தார்.  இதன் பேரில் பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள இருவரை தேடி வருகின்றனர். 

 

 

Next Story

மசோதா விவகாரம்; ஆளுநர் தரப்புக்கு கடுமை காட்டிய உச்சநீதிமன்றம்!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

governor vs supreme court

 

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.

 

ஆளுநர் தரப்பிலிருந்து மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது எனக் கூறப்பட்டபோது, “அது தொடர்பான கோப்புகள் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டதா? ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ (Kill the Bill) அதிகாரம் இல்லை. குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் ஆளுநர் முதலிலேயே செய்திருக்க வேண்டும். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது.

 

ஆளுநர், ஒன்றிய அரசின் NOMINEE என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து இந்த பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், “சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். காலதாமதம் செய்தால் மசோதாக்கள் விசயத்தில் நாங்கள் உத்தரவிட நேரிடும்” எனக்  கடுமை காட்டியதுடன், வழக்கு விசாரணையை 11 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.