Skip to main content

மீனைப்பிடி...காசைப்பிடி... யூ டியூப்பால் லட்சாதிபதியான தொழிலாளி!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பார் என்பது உண்மை தான். கேரளாவை சேர்ந்த ஒருவர் கஷ்டத்தில் இருந்து மீண்டு இப்போது, புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ஒரு காலத்தில் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட அவர், இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்றால் அவரது திறமையும், தன்னம்பிக்கையும் தான்.

Millionaire growth worker by using You Tube chennel

கேரளாவின் மீனவ கிராமமான கும்பளங்கியை சுற்றிலும் உள்ள தெளிவான கழிமுக நீரை காண்பதற்கு அவ்வளவு வசீகரமாக இருக்கும். கடவுளின் தேசத்தில் உள்ள இந்த அழகான காட்சி, உன்னி ஜார்ஜ் வாழ்க்கையின் கஷ்ட காலங்களிலும் சரி, நல்ல காலங்களிலும் சரி, அப்படியே அவரது மனதில் தங்கியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு உன்னி ஜார்ஜ் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அடுத்த பேரிடியாக சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வைத்திய செலவுக்கே பணம் இன்றி அவதிப்பட்ட உன்னி, குடும்பத்தையும் கவனிக்க முடியாத நிலைக்கு ஆளானார்.

Millionaire growth worker by using You Tube chennel

 

உன்னியின் நிலைமை அறிந்து அவரது நண்பர்கள் சிலர் பண உதவி செய்தாலும், அது போதுமானதாக இல்லை. ஏனென்றால் உன்னியின் அறுவைச் சிகிச்சைக்கு மட்டுமே ரூ.15 லட்சம் தேவைப்பட்டது. ஆகையால் அவரது நண்பர்கள் நிதி திரட்டுவதற்கு வசதியாக உன்னியின் நிலைமை பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதைக்கண்டு ஓரளவுக்கு பண உதவி கிடைத்தது. அந்த பணத்தைக் கொண்டும், கடன் வாங்கியும் சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் உன்னி ஜார்ஜ். வாங்கிய கடனை கட்ட வேண்டும், வீட்டு செலவுக்கும் பணம் வேண்டுமே என எண்ணிய உன்னி ஜார்ஜ், அடுத்து என்ன செய்வது என்று குழம்பிப் போய் இருந்தார்.

Millionaire growth worker by using You Tube chennel

ஒருநாள் கழிமுகப்பகுதியில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தபோது, சமூக வலைத் தளமான யூடியூப்பில் உள்ள படங்கள் குறித்து, நண்பர்கள் எடுத்துக் கூறி இருக்கின்றனர். யூடியூப் உலகம் மிகப்பெரியதுஅதனுள் சென்று பார்த்தபோது, யூடியூப் உலகம் மிகப் பெரியது என்பதை உணர்ந்தார் உன்னி. OMKV Fishing & Cooking சானல் என்ற பெயரில் தனக்கென அக்கவுன்ட் கிரியேட் பண்ணிய உன்னி ஜார்ஜ், கழிமுகத்திலிருந்து தானே மீன்பிடித்து அதை சமைக்கவும் செய்தார். அதை நண்பர்கள் உதவியுடன் வீடியோ பதிவு செய்து, யூடியூப்பில் பதிவேற்றினார். நாளடைவில் வீடியோவிற்காக கொச்சி, திருவல்லா, கோழிக்கோடு, வயநாடு கடற்கரை பகுதிகளில் பயணம் செய்து, விதவிதமான மீன்களை பிடித்து தனக்கே உரிய தனித்துவப் பாணியில் உள்ளூர் முறையில் சமைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இதுவரை 143 வீடியோக்களை அவர் பதிவிட்டிருக்கிறார்.

Millionaire growth worker by using You Tube chennel


ஒவ்வொரு வீடியோவும் மலையாள மொழியில் கூற வேண்டும் எனில் அடிபொலி. உன்னியின் கைவண்ணத்தால்  யூ- டியூப்பில் பார்வைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதற்கேற்ப வருமானமும் ஒவ்வொரு மாதமும் லட்சத்தை தாண்டியிருக்கிறது. உன்னியின் யூ- டியூப் சேனலை சுமார் 2.74 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவின் மிகப் பிரபலமான யூ- டியூப்  ஸ்டார்களில் ஒருவராக திகழ்கிறார் உன்னி ஜார்ஜ்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.