Skip to main content

கடல் வளத்தை அழிக்கும் பிளாஸ்டிக்... எச்சரிக்கும் கேரள இளைஞர்!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

2025 ஆண்டு வாக்கில் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக்கே அதிகமாக இருக்கும். இப்படித் தான் புள்ளி விபரங்கள் நமது வயிற்றில் புளியை கரைக்கின்றன. இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் நெகிலிப் பைகள், தேநீர் கோப்பைகள், நெகிலி தட்டுக்கள். பிளாஸ்டிக் பாட்டில்கள் இந்த பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்தாலும், இந்த நிமிடம் வரை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

 Marine pollution plastics  Kerala youth alert awareness


நாளைய தலைமுறை எக்கேடு கெட்டால் நமக்கு என்ன? என்று நாம் இருக்கிறோம். ஆனால், கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள சோம்பலா என்ற கிராமத்தை சேர்ந்த பிரயேஷ், இதுவரை 13.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் இருந்து அகற்றி இருக்கிறார். அவரது இந்த முயற்சிக்கு, நண்பர்களும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். 

“கடற்கரையில் தான் அதிகமான குப்பைகள் இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், கடலின் ஆழமான பகுதிகளில் கூட குப்பைகளை காண முடிகிறது. படகுகளில் செல்லும் பயணிகள் அல்லது சுற்றுலாவாசிகள் மட்டும் இதற்கு காரணமல்ல. தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களை கடலுக்குள் தூக்கியெறியும் மீனவர்களும் இதற்கு பொறுப்பாவர்கள்” என்கிறார் பிரயேஷ்.

 Marine pollution plastics  Kerala youth alert awareness

 
சில சமயங்களில் அக்கம் பக்கத்தினரின் கேலிப் பேச்சும் மக்களின் அக்கறையின்மையும் அவரை பாதித்தாலும், தனது முயற்சியில் தளராமல் இருக்கிறார் பிரயேஷ். தான் செய்வதை பார்த்து யாராவது ஒரு நபர் உத்வேகம் அடைந்து அவரது பகுதிகளில் இதை செயல்படுத்தினால், இது ஒரு சங்கிலித் தொடராக ஆரம்பமாகும் என நினைத்தார். அவரது எண்ணத்திற்கு ஏற்ப அருகே உள்ள ஆழியூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் பிரயேஷுடன் இணைந்து இப்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் இதுவரை கடலில் இருந்து 13.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.

 Marine pollution plastics  Kerala youth alert awareness

"மீன் வலையில் 50 கிலோ மீன் சிக்குகிறது என்றால், அதில் 13 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகளே இருக்கும். இதன் மூலம் எந்தளவிற்கு கடலில் பிளாஸ்டிக் மிதக்கிறது என்பதையும், இனிவரும் தலைமுறை மீன் பிடிக்கமாட்டார்கள் பிளாஸ்டிக்கை தான் பிடிப்பார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்று எச்சரிக்கிறார் பிரயேஷ்.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.